Home Sports விளையாட்டு செய்திகள் குழாய் அடி சண்டையில் மாமியாரை கொன்ற மருமகள் துக்கம் தாங்காமல் தானும் தற்கொலை | Daughter in law killed mother in law over tap water fight in salem

குழாய் அடி சண்டையில் மாமியாரை கொன்ற மருமகள் துக்கம் தாங்காமல் தானும் தற்கொலை | Daughter in law killed mother in law over tap water fight in salem

0
குழாய் அடி சண்டையில் மாமியாரை கொன்ற மருமகள் துக்கம் தாங்காமல் தானும் தற்கொலை | Daughter in law killed mother in law over tap water fight in salem

[ad_1]

சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம், கொங்கணாபுரம் ஒன்றியம், குரும்பப்பட்டி கிராமம், தானமூர்த்தியூரில் வசித்து வருபவர் எல்லப்பன் மனைவி தைலம்மாள் (75). இவருக்கு 3 மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். 

இந்த நிலையில் தைலம்மாளின் கடைசி மகனான ஓட்டுநர் மெய்வேலின் மனைவி செல்விக்கும் மாமியார் தைலமாலுக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடங்கி, தெருவில் தண்ணீர் பிடிப்பது வரை வாய் தகராறு அடிக்கடி ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த நிலையில் இன்றும் தண்ணீர் பிடிப்பதில் இருவருக்கும் இடையே  தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த சண்டை சூடுபிடித்து கைகலப்பாக மாறியுள்ளது.

மேலும், இதன் காரணமாக ஆத்திரமடைந்த மருமகள் செல்வி, மாமியார் தைலம்மாளை மண்வெட்டி கைப்பிடியால் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த தைலம்மாள் இரத்த வெள்ளத்தில் சாய்ந்து உயிருக்கு போராடியுள்ளார்.

மேலும் படிக்க | ஸ்வீட் எடு கொண்டாடு: இந்த ஆசைய கட்டுப்படுத்துறகு ஈஸி

அப்போது வீட்டிற்கு வந்த கடைசி மகன் மெய்வேல் தாயாரின் சத்தம் கேட்டு வீட்டுக்குள் சென்று பார்த்த போது தலையில் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி வந்ததை கண்டார். பின்னர் மெய்வேல் உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து தனது தாயை எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிய நிலையில்  மெய்வேலின் மனைவி செல்வி போலீசுக்கு பயந்தும், துக்கம் தாங்காமலும் அவரது வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

மேலும் படிக்க | இனிப்பு சுவையின் அடிப்படை அம்சங்கள் என்ன தெரியுமா?

இச்சம்பவம் எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கொங்கணாபுரம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், இறந்து போன மாமியார் மருமகள் இருவரது உடல் பிரேத பரிசோதணைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | உங்கள் சிறுநீரகம் சுத்தமாக உள்ளதா: தெரிந்துகொண்டு சுத்தப்படுத்துவது எப்படி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

zeenews.india.com

Zee News Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here