தேவையானவை :
இட்லி அரிசி – 1 கப்
தக்காளி நறுக்கியது – ½ கப்
உப்பு – தேவைக்கேற்ப
தாளிக்க:
எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு, சீரகம் – தலா 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – 4 இலைகள்
பெருங்காயம் – 1 சிட்டிகை
செய்முறை:
அரிசியை நான்கு மணி நேரம் நன்கு ஊறவைக்க வேண்டும். பிறகு அரிசியுடன் தக்காளி, சேர்த்து இரண்டையும் நைஸாக அரைத்துக் கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் தாளிக்க கொடுத்துள்ள கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் அனைத்தும் சேர்த்து தாளித்து ஆறியதும் மாவில் சேர்க்கவும். பிறகு உப்பு கலந்து தோசையாக ஊற்றி எடுக்கவும்.
Source link
www.dinakaran.com