கேரள
இளைஞர்கள்
தி
ஃபேமிலி
மேன்
முதல்
பாகத்தில்
கேரளாவை
சேர்ந்த
இளைஞர்கள்
ஐ.எஸ்.ஐ.எஸ்
தீவிரவாத
அமைப்பில்
அங்கம்
வகித்து
இருப்பதாக
சித்தரிக்கப்பட்டு
இருந்தன.
நாளிதழ்களில்
வரும்
செய்திகளின்
அடிப்படையிலேயே
இந்த
கதையை
உருவாக்கி
உள்ளோம்
என
தி
ஃபேமிலி
மேன்
வெப்
தொடரிலேயே
இயக்குநர்கள்
அறிவித்துள்ளனர்.
இலங்கை
தமிழர்கள்
முதல்
பாகம்
மிகப்பெரிய
ஹிட்
அடித்த
நிலையில்,
இரண்டாம்
பாகத்தின்
ரிலீசுக்கு
ரசிகர்கள்
மிகுந்த
ஆர்வத்துடன்
காத்திருந்தனர்.
இதில்,
நடிகை
சமந்தா
வில்லியாக
நடித்திருப்பதாக
முன்னதாக
செய்திகள்
வெளியாகிய
நிலையில்,
தென்னிந்திய
சினிமா
ரசிகர்களும்
இந்த
வெப்
தொடருக்காக
காத்திருந்தனர்.
ஆனால்,
சமீபத்தில்
ரிலீசான
டிரைலரில்
நடிகை
சமந்தா
விடுதலை
புலிகள்
இயக்கத்தை
சேர்ந்தவர்
போல
சித்தரிக்கப்பட்டு
இருப்பதை
பார்த்த
பலரும்
இந்த
வெப்
தொடர்
மீது
தங்களின்
அதிருப்தியை
தெரிவித்து
அதனை
தடை
செய்ய
கோரிக்கை
விடுத்து
வருகின்றனர்.
சமந்தாவுக்கு
கண்டனம்
நடிகை
சமந்தாவுக்கு
சமூக
வலைதளங்களில்
ஏகப்பட்ட
ரசிகர்கள்
மற்றும்
அரசியல்
தலைவர்கள்
கடும்
கண்டனத்தை
தெரிவித்தனர்.
சென்னையை
சேர்ந்த
சமந்தா
இப்படி
தமிழர்களின்
மனங்களை
புண்படுத்தும்
விதமான
கதையை
எப்படி
தேர்வு
செய்து
நடிக்கலாம்
என்றும்
கேள்வி
எழுப்பினர்.
அதற்கு
தனது
ட்விட்டர்
பக்கத்தில்
அமைதியாக
நம்பிக்கையுடன்
காத்திருங்கள்
என
பதிலளித்தார்.
தடை
கோரிய
தமிழக
அரசு
தி
ஃபேமிலி
மேன்
2
வரும்
ஜூன்
4ம்
தேதி
அமேசான்
பிரைமில்
வெளியாக
உள்ள
நிலையில்,
அதன்
டிரைலர்
கிளப்பிய
சர்ச்சையால்
தமிழகம்
முழுவதும்
கண்டன
குரல்கள்
எழுந்தன.
சீமான்,
வைகோ
உள்ளிட்ட
தலைவர்கள்
கண்டனங்களை
பதிவு
செய்ய
தமிழக
அரசு
மத்திய
அமைச்சர்
பிரகாஷ்
ஜவடேகருக்கு
இந்த
தொடரை
ஒளிபரப்பக்
கூடாது
என
தடை
விதிக்குமாறு
கோரிக்கை
வைத்துள்ளது.
இயக்குநர்கள்
விளக்கம்
இந்த
வெப்
தொடரை
இயக்கி
உள்ள
இரட்டை
இயக்குநர்களான
ராஜ்
மற்றும்
டிகே,
தமிழர்களின்
உணர்வுகளை
நன்கு
அறிவோம்.
வெப்
தொடர்
வெளியாகும்
வரை
சற்றே
பொறுமையுடன்
காத்திருங்கள்.
நிச்சயம்
தமிழர்களின்
மனங்களை
புண்படுத்த
மாட்டோம்,
நம்புங்கள்
என்று
விளக்க
அறிக்கை
கொடுத்துள்ளனர்.
தடை
செய்யப்படுமா
தி
ஃபேமிலி
மேன்
2
விவகாரம்
விஸ்வரூபம்
எடுத்துள்ள
நிலையில்,
ரிலீசுக்கு
முன்னதாக
அமைச்சர்
மற்றும்
அதிகாரிகளுக்கு
போட்டு
காண்பிக்கப்படுமா?
ஆட்சேபனையான
காட்சிகள்
மற்றும்
வசனங்கள்
இடம்பெற்று
இருந்தால்
தி
ஃபேமிலி
மேன்
2
வெப்
தொடர்
தடை
செய்யப்படுமா?
என்கிற
கேள்விகள்
எழுந்துள்ளன.
தமிழ்
நடிகர்கள்
முதல்
பாகத்திலேயே
பிரியாமணி,
ஆடுகளம்
கிஷோர்
உள்ளிட்ட
தமிழ்
நடிகர்கள்
நடித்திருந்தனர்.
இரண்டாம்
பாகத்தில்
சமந்தா,
மைம்
கோபி,
தேவதர்ஷினி,
அழகம்
பெருமாள்
உள்ளிட்ட
பலரும்
இந்த
வெப்
தொடரில்
நடித்துள்ளனர்.
இந்த
வெப்
தொடரில்
நடித்துள்ள
அனைவருக்கும்
எதிராக
கண்டனங்களும்
தொடர்ந்து
வலுத்து
வருகின்றன.
தமிழக
அரசின்
கோரிக்கையை
ஏற்று
மத்திய
அரசு
என்ன
நடவடிக்கை
எடுக்கப்
போகிறது
என்பதை
எதிர்நோக்கி
பலரும்
காத்திருக்கின்றனர்.