இந்நிலையில் அடுத்து இங்கிலாந்துடன் நடக்கவிருக்கும் அரையிறுதிப் போட்டியில் யாரைக் களமிறக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், “தினேஷ் கார்த்திக் ஒரு திறமையான வீரர். ஆனால் இங்கிலாந்து அல்லது நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் என்று வரும்போது, அவர்களின் தாக்குதலைப் பார்க்கும்போது, உங்களுக்கு ஒரு வலுவான இடது கை ஆட்டக்காரர் தேவை என்று நினைக்கிறேன்.
இந்திய அணியில் ஒரு மேட்ச் வின்னராக யார் அதைச் செய்ய முடியும் என்று பார்க்க வேண்டும். எனவே இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட்டை களம் இறக்க வேண்டும். ரிஷப் பண்ட் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த ஒரு நாள் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் கொண்டிருக்கிறார் என்பது மற்றும் இதற்குக் காரணம் கிடையாது. அவர் நிச்சயம் நன்றாக விளையாடி அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்வார்” என்று தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து உங்களின் கருத்து என்ன? ரிஷப் பண்ட் – தினேஷ் கார்த்திக் – யாரை இந்திய அணி களமிறக்க வேண்டும்?