எதிர்வரும் 2022 ஐபிஎல் சீசனை முன்னிட்டு ‘மெகா ஏலம்’ நடைபெறவுள்ளது. பெரும்பாலான ஐபிஎல் ஃபிரான்சைஸ் அணிகள் சில முக்கிய வீரர்கள் மட்டுமே தக்கவைத்துக் கொண்டு, தங்கள் அணியில் மீதமுள்ள வீரர்களை விடுவிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியமும், ஐபிஎல் நிர்வாக குழுவும் எத்தனை வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதை இதுவரை தெரிவிக்காமல் உள்ளது. இந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வரும் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் அஷ்வின், டெல்லி அணியின் திட்டம் என்னவாக இருக்கும் என தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
“எனக்கு தெரிந்து ஷ்ரேயஸ் ஐயர் தக்கவைக்கப்பட்ட வாய்ப்பு இல்லை. அதே போல இந்த லிஸ்டில் நானும் இருக்கக்கூடும்” என வீடியோ ஒன்றில் தனது யூகத்தை சூசகமாக சொல்லியுள்ளார் அஷ்வின்.
டெல்லி அணியில் ரிஷப் பண்ட், ஆவேஷ் கான், ரபாடா, பிருத்வி ஷா, அக்சர் பட்டேல் ஆகிய வீரர்களை தக்கவைக்க முயற்சிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source link
puthiyathalaimurai.com
Web Team