பேசும்போதுதான் தெரிந்தது பூர்வதாரணியின் ’உண்மை முகம்’.
“எனக்கு நடிக்கணும்ங்குற ஆர்வம் எல்லாம் இல்ல. வானம் கலை திருவிழாவுக்கு அடிக்கடி போவோம். அங்க ட்ராமா எல்லாம் பண்ணியிருக்கேன். அப்போ, ஒரு அக்கா என்னை பார்த்துட்டு, “நீ ரொம்ப நல்லா ஆக்ட் பண்ற. ஷார்ட் ஃபிலிம்ல நடிக்கிறியா”ன்னு கேட்டாங்க. நானும் ஜாலியா போயி நடிச்சு கொடுத்தேன். அந்த ஷார்ட் ஃபிலிம் ரஞ்சித் பெரியப்பா பார்த்திருக்காங்க. நான், நடிச்சது அவங்களுக்கு முன்கூட்டியே தெரியாது. இது நம்ம தாரணியாச்சேன்னு பிறகுதான் அவருக்கு தெரிஞ்சது. அதுக்கப்புறம்தான் என்னை கூப்பிட்டு பாராட்டி ’தம்மம்’ல நடிக்க வெச்சார் பெரியப்பா. அதுக்கப்புறம்தான் ‘கர்ணன்’ படத்துல காட்டுப்பேச்சியா நடிக்க வாய்ப்பு கிடைச்சது. ஆனா, ‘கர்ணன்’ல என்னோட முகம் தெரியலன்னாலும் ’யாருப்பா அந்த காட்டுப்பேச்சி?’ன்னு எல்லோரும் தேடுனாங்க.
இப்போ, ’தம்மம்’ல கதை முழுக்க என் முகம் தெரிஞ்சதால ஆச்சர்யமா பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அது, இன்னும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. படம் ஓடிடியில வெளியானதால என் ஃப்ரெண்ட்ஸ்ல்லாம் இன்னும் ‘தம்மம்’ படத்தை பார்க்கல. செல்போன்ல அனுப்புடின்னு கேட்டுக்கிட்டிருக்காங்க. படம் பார்க்கலைன்னாலும் விஜய் டிவியில வந்த விளம்பரங்களைப் பார்த்துட்டு ’ஏய் நீதானே அது’ன்னு ஆச்சர்யமா கேட்குறாங்க. செம்ம ஹேப்பியா இருக்கு. ‘ரொம்ப நல்லா நடிச்சிருக்கம்மா’ன்னு வெங்கட் பிரபு சார் பாராட்டிட்டு ’உனக்கு ஏதாவது நடிக்க பயிற்சி கொடுத்தாங்களாம்மா? ன்னு கேட்டாரு. ‘இல்லை’ன்னு சொன்னதும் ஆச்சர்யப்பட்டார்.