இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாலகிருஷ்ணாவுக்கு இணையத்தில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா சமீபத்தில் ஒரு பேட்டியில், “இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் யாரென்றே எனக்குத் தெரியாது. நான் கவனித்ததில்லை. வருடத்துக்கு ஒரு ஹிட் பாடல் கொடுப்பார். ஆஸ்கர் வாங்கியிருக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். பாரத ரத்னா விருதெல்லாம் என்.டி.ஆரின் செருப்புக்குச் சமம், கால் விரல் நகத்துக்குச் சமம்” என்று பேசினார்.