[ad_1]
இன்றைய ஐபிஎல் போட்டியில் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும் முனைப்பில் குஜராத் அணியும், பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கும் உத்வேகத்தில் பெங்களூரூ அணியும் களமிறங்குகின்றன.
ஐபிஎல் 2022 தொடரில் மும்பை பிராபோர்னில் இன்று நடக்கும் 43-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு தொடரில் வெற்றிகரமான அணியாக வலம் வரும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 7 வெற்றி, ஒரு தோல்வி என்று 14 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடத்தில் பயணிக்கிறது. இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அந்த அணியின் பிளே ஆட் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி விடும்.
பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்கள் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அந்த அணிக்கு பெரும் பலகீனம். அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒருசேர மிரட்டினால் மட்டுமே பலம் வாய்ந்த குஜராத்தின் வீறுநடைக்கு பெங்களூரு அணியால் முட்டுக்கட்டை போட முடியும். ஐ.பி.எல். போட்டியில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
பிளே ஆஃப் கட்டத்தை நோக்கி இரு அணிகளும் முழு உத்வேகத்துடன் விளையாடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. டாஸ் வென்ற பெங்களூரூ அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இரு அணிகளின் ஆடும் லெவன்:
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
[ad_2]
Source link
puthiyathalaimurai.com
Web Team