எதிர்வரும் 2022 ஐபிஎல் சீசனில் மொத்தம் பத்து அணிகள் விளையாட உள்ளதாக ஐபிஎல் நிர்வாக குழு மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் சொல்லி இருந்தது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரம் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ நகரத்தையும் மையமாகக் கொண்டு புதிய அணிகள் உதயமாகி உள்ளன.
CVC கேபிடல் நிறுவனம் அகமதாபாத் அணியை ஏலத்தில் எடுத்துள்ளது. சுமார் 5200 கோடி ரூபாய்க்கு அகமதாபாத் அணியை ஏலத்தில் வென்றுள்ளது CVC.
ஆர்.பி சஞ்சீவ் கோயங்கா குழுமம் லக்னோ அணியை ஏலத்தில் எடுத்துள்ளது. சுமார் 7000 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி ஏலம் விடப்பட்டுள்ளது.
இந்த இரு அணிகளும் எதிர்வரும் சீசனில் ஏற்கனவே உள்ள எட்டு அணிகளுடன் சேர்ந்து விளையாடும்.