டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று கொடுத்தவர் நீரஜ் சோப்ரா. இந்நிலையில் சுதந்திர தினத்தன்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முழங்கை பகுதியில் ஏற்பட்ட காயம் மற்றும் ஒலிம்பிக் பதக்கத்தை கையில் ஏந்தியுள்ள தனது படத்தை இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிர்ந்து ஒரே மெசேஜை கடத்தியுள்ளார் நீரஜ்.
View this post on Instagram
“2019 தொடங்கி இன்று வரை அதுவொரு அருமையான பயணம். அன்று என் முழங்கையில் காயம், இன்று கையில் பதக்கம். எனக்கு சிறப்பான சிகிச்சை கொடுத்த மருத்துவர் டின்ஷா பர்டிவாலாவின் மற்றும் எனது பயிற்சியாளர், எனது பிஸியோ, எனது அணியினருக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவன்.
நிச்சயம் இந்த பதக்கம் பாதகமான நேரத்தை எதிர்கொண்டு வரும் மக்களுக்கு ஒரு நம்பிக்கை கீற்றொளியை கொடுக்கும் என நம்புகிறேன்.
இனிய விடுதலை நாள் வாழ்த்துகள்! ஜெய் ஹிந்த்” என தெரிவித்துள்ளார்.