[ad_1]
நிர்வாண ஆடிஷன்
தொழில் அதிபரான ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட சம்பவம் பாலிவுட் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சகாரிகா ஷோனா, வெப் சீரிஸில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறிய ராஜ் குந்த்ரா தன்னை நிர்வாணமாக ஆடிஷன் செய்ய சொன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
எதிரான ஆதாரங்கள்
இதனை தொடர்ந்து அப்போதே மும்பை போலீசார் ராஜ் குந்த்ரா மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் தற்போது அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டியுள்ள போலீசார் அவரை நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்.
மும்பை போலீசுக்கு அனுமதி
இதனை தொடர்ந்து மும்பை ஜேஜே மருத்துவமனையில் அவருக்கு நேற்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ராஜ் குந்த்ரா. அவரை வரும் 23ஆம் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மும்பை போலீசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
போதுமான ஆதாரங்கள்
ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்ட வழக்கில் ராஜ் குந்த்ராதான் முக்கிய குற்றவாளி என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக மும்பை போலீஸ் கமிஷனர் நேற்று முன்தினமே அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அந்த ஆதாரங்கள் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப் சேட்
அதாவது, ராஜ் குந்த்ரா தனது பார்ட்னர்களுடன் ஆபாச படம் குறித்து செய்த வாட்ஸ் அப் சேட்தான் அவை என தகவல் வெளியாகியுள்ளது. ராஜ் குந்த்ரா தனது பார்ட்னர்களுடன் தனது ஆபாச பட புராஜெக்ட் குறித்து விலாவாரியாக பேசியுள்ளார் என தெரிகிறது.
அதிரடி கைது
ஆபாச கன்டென்ட் நிறைந்த அந்த வாட்ஸ் அப் சேட்டுகளைதான் முக்கிய ஆதாரமாக எடுத்துள்ளது மும்பை போலீஸ். இதனை வைத்தே மும்பை போலீசார் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
வாரத்திற்கு ஒரு படம்தான்
அந்த வாட்ஸ்அப் சேட்டில் ராஜ் குந்த்ராவும் அவரது பார்ட்னர்களும் வருவாய் ஆதாயம் மற்றும் லாபத்தை பகிர்ந்து கொள்வது குறித்து பேசியுள்ளதாகவும் தெரிகிறது. அந்த சேட்டுகளில் ஒரு பார்ட்னர் நாங்கள் வாரத்திற்கு ஒரே ஒரு படத்தை மட்டுமே ரிலீஸ் செய்கிறோம்.. எனவே ஆம்.. விற்பனை அதிகரிக்கும் என பதில் கூறியுள்ளதாக தெரிகிறது.
[ad_2]
Source link