Home Sports விளையாட்டு செய்திகள் எதிர்வரும் ஐபிஎல் சீசனில் பயிற்சியாளராக ஹர்பஜன் சிங் செயல்பட உள்ளதாக தகவல்!

எதிர்வரும் ஐபிஎல் சீசனில் பயிற்சியாளராக ஹர்பஜன் சிங் செயல்பட உள்ளதாக தகவல்!

0
எதிர்வரும் ஐபிஎல் சீசனில் பயிற்சியாளராக ஹர்பஜன் சிங் செயல்பட உள்ளதாக தகவல்!

[ad_1]

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப்பெறவில்லை என்றாலும் அவர் இந்திய அணிக்காக விளையாடி வெகு காலம் ஆகிவிட்டது. ஆனாலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து விளையாடி வந்தார். கடந்த சீசனில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காகவும், அதற்கு முந்தைய சீசனில் சிஎஸ்கேவுக்கும் விளையாடி விளையாடி இருந்தார். இந்த நிலையில் ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து அவர் ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

image

41 வயதான அவருக்கு இரண்டு ஐபிஎல் அணிகளுக்காக விளையாட வாய்ப்பு கிட்டியதாம். இருந்தாலும் அதை மறுத்த ஹர்பஜன் அதில் ஒரு அணிக்கு ஆலோசகராக, பகுதி நேர பயிற்சியாளராக அல்லது வழிகாட்டியாக செயல்பட முடிவு செய்துள்ளதாக PTI செய்தி நிறுவனம் தனது ரிப்போர்டில் தெரிவித்துள்ளது. அவரது நீண்ட அனுபவத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அந்த ஃப்ரான்சைஸ் அணி முடிவு செய்துள்ளதாம். அதன்படி அவர் எதிர்வரும் சீசனுக்கான ஏலத்தில் எந்த வீரரை ஏலத்தில் எடுக்கலாம் என தனது விருப்பத்தை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ச்சிக்காக தனது அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ள தயார் என 2021 சீசனில் நடைபெற்ற போட்டியின் போது ஹர்பஜன் பேட்டியில் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மும்பை இன்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் என ஐபிஎல் அரங்கில் சாம்பியன் பட்டத்தை வென்ற அணிகளில் அங்கம் வகித்துள்ளார் ஹர்பஜன்.

இதையும் படிக்கலாம் : இந்திய கிரிக்கெட் அணியின் ‌தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணமும் சில கேள்விகளும்? 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

[ad_2]

Source link

puthiyathalaimurai.com

Web Team

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here