நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் தனது சமூக வலைதளபக்கத்தில் பிரியங்கா சோப்ரா ஜோன்ஸ் என்றிருந்த தனது பெயரை பிரியங்கா என்று மாற்றினார். இதனால் பிரியங்கா தன் கணவரை விவாகரத்து செய்யப்போகிறாரா என்ற பரபரப்பு ஏற்பட்டது. பிரியங்கா சோப்ரா தனது கணவரை விவாகரத்து செய்யும் திட்டம் இல்லை என்றும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் பிரியங்கா சோப்ராவின் தாயார் மது சோப்ரா கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் இப்பிரச்னைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரியங்கா சோப்ராவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவரின் கழுத்தில் கையைப்போட்டுக்கொண்டிருப்பது போன்ற புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நண்பர்களே, குடும்பத்தினரே I love you @nickjonas என்று குறிப்பிட்டுள்ளார்.
அப்புகைப்படமே அவர்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்பதை காட்டுவதாக அமைந்தது. பிரியங்காவின் இப்பதிவிற்கு 13 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் கொடுத்துள்ளனர். பிரியங்கா சோப்ராவும், நிக் ஜோனஸும் 201தும் ஆண்டு பேஷன் ஷோ ஒன்றில் முதல் முறையாக ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டனர். அதனை தொடர்ந்து இருவரும் நட்பாக பழகினர். இருவரும் லண்டனில் கோடைகால விடுமுறையை கொண்டாட சென்றபோது நிக் ஜோனஸ் தனது காதலை பிரியங்கா சோப்ராவிடம் தெரிவித்தார். பிரியங்கா சோப்ராவிற்காக நிக் ஜோனஸ் நியூயார்க் முழுக்க சுற்றி நிச்சயதார்த்த மோதிரம் வாங்கினார். இதையடுத்து இருவரும் 2018-ம் ஆண்டு ராஜஸ்தானில் திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் பிரியங்கா சோப்ரா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியானது. நெட்பிளிக்ஸ் காமெடி நிகழ்ச்சி ஒன்றில் பிரியங்கா சோப்ரா கலந்துகொண்டபோது குழந்தை குறித்து கேட்டதற்கு, எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக தெரிவித்தார். அதனை சிலர் கர்ப்பமாக இருப்பதாக செய்தி பரப்பிவிட்டனர். பிரியங்கா சோப்ரா இச்செய்தி குறித்து கேள்விப்பட்டு அது ஜோக் என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்தார்.
Source link
cinema.vikatan.com
மு.ஐயம்பெருமாள்