[ad_1]
நண்பர்கள் எல்லாம் எவிக்டட்
பாவனிக்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த பிக் பாஸ் வீட்டில் நண்பர்களே இல்லை என்பது போல செய்தி உருவாக்கப்பட்டு இருப்பதை பார்த்த ரசிகர்கள் பாவனிக்கு தான் இந்த வீட்டில் நண்பர்கள் அதிகம் என்றும் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாரமாக எவிக்ட் ஆகி வெளியே போய் விட்டனர் என்றும் கலாய்த்து வருகின்றனர்.
அழுது நடித்த பிரியங்கா
பாவனி பற்றி பரிதாபமாக பேசுவது போல அவரை பங்கமாக கலாய்த்து விட்டார் பிரியங்கா. இமான் அண்ணாச்சி, தாமரை செல்வியை வம்பிழுத்த பிரியங்கா கடைசியாக பாவனி போலவும் அழுது காட்டி நடித்து அவரை அசிங்கப்படுத்தி விட்டார். இத்தனைக்கும் சில வாரங்களாக பாவனி அழுவதை நிறுத்தி விட்டார் என்பது கூட அவரது தோழி பிரியங்காவுக்கே தெரியவில்லையா? இல்லை நமக்கு பாவனியின் அழுகாச்சியை போட்டு காட்டவில்லையா? என ராஜு பாய் ரசிகர்கள் நக்கலடித்து வருகின்றனர்.
நண்பர்கள் இல்லை
பாவனியும் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டு தனக்கு இந்த வீட்டில் யாருமே உண்மையான நண்பர்கள் இல்லை என்பதை வெளிப்படையாக போட்டு உடைத்து விட்டார். எந்நேரமும் பாவனி உடன் அன்பாக பேசும் அபிநயையும் அவர் அந்த லிஸ்ட்டில் சேர்க்கவில்லை. புதிதாக வந்த அமீர் மட்டுமே தனக்கு ஓரளவு ஒத்துப் போகிறார் என பாவனி பேசியதை கேட்ட பிறகும் அபிநய் அவருக்காக அடுத்த சீனிலேயே வந்து பேசினார் என நெட்டிசன்கள் நோட் பண்ணி கலாய்த்து வருகின்றனர்.
ராஜு டீமுக்கு ஐடியா
பிரியங்கா, அபிஷேக், சிபி அணி சூப்பரா அடுத்த அணியினரை டார்கெட் செய்து விளையாடி வருகின்றனர். நம்ம டீமில் பேசுவதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தும் சும்மா காமெடி பண்ணிட்டு இருந்தா வொர்க்கவுட் ஆகாது என ராஜு டீமில் இருக்கும் பாவனி சூப்பர் ஐடியா கொடுத்து தனது ஆட்டத் திறமையை வெளிக்காட்டியது சிறப்பு என்றும் சேலையில் பாவனி செம அழகு என்றும் பாவனி ஆர்மியினர் அவரை கொண்டாடி வருகின்றனர்.
[ad_2]
Source link