[ad_1]
அசாதாரண
சோர்வு
பல
நோயாளிகள்
உடல்
சோர்வு
அல்லது
உடல்
அசௌகரியத்தை
உணரக்கூடும்
மற்றும்
அதிக
வேலை,
மோசமான
தூக்கம்
அல்லது
சில
வயது
தொடர்பான
வலி
போன்றவற்றை
உணரலாம்
என்று
ஹார்வர்ட்
ஆய்வு
கூறுகிறது.
மாரடைப்பு
உள்ள
ஒவ்வொரு
3
பேரில்
2
பேருக்கு
நெஞ்சு
வலி,
மூச்சுத்
திணறல்
அல்லது
மிகுந்த
உடல்
சோர்வு
போன்றவற்றை
ஒரு
வாரங்களுக்கு
முன்
உணர்வதாக
சிடார்ஸ்
சினாய்
மருத்துவமனை
கூறுகிறது.
தூக்க
பிரச்சனை
சிடிசி-யின்
படி,
தூக்கமின்மை
உயர்
இரத்த
அழுத்தம்
மற்றும்
இதய
நோயுடன்
தொடர்புடையது.
காலப்போக்கில்
மோசமான
தூக்கம்
ஆரோக்கியமற்ற
பழக்கங்களுக்கு
வழிவகுத்து,
இதயத்தை
காயப்படுத்தும்.
மேலும்
தூக்கமின்மை
மன
அழுத்த
அளவை
அதிகரிப்பதோடு,
உடல்
செயல்பாட்டைக்
குறைக்கும்
மற்றும்
ஆரோக்கியமற்ற
உணவுகளின்
மீது
நாட்டத்தை
அதிகரிக்கும்.
எனவே
மாரடைப்பு
வருவதற்கு
முன்
தூக்கமின்மை
பிரச்சனையை
சந்தித்தால்
கவனமாக
இருங்கள்.
இது
இவிர
மிகுந்த
சப்தத்துடனான
குறட்டை
விட்டு
தூங்கினால்,
அது
இதய
ஆரோக்கியம்
மோசமாக
இருப்பதன்
மற்றொரு
அறிகுறியாகும்.
பெரும்பாலும்
உடல்
பருமன்
மற்றும்
இதய
செயலிழப்பு
போன்ற
சில
உடல்நல
பிரச்சனைகளைக்
கொண்டவர்களுக்கு
மிகுந்த
சப்தத்துடனான
குறட்டை
ஏற்படலாம்.
கவலை
சில
நோயாளிகள்
மிகவும்
கடுமையான
மன
அழுத்தத்தால்
பாதிக்கப்படுகின்றனர்.
இது
மாரடைப்பு
நோயாளிகளிடையே
பொதுவாக
காணப்படும்.
ஆனால்
சிலருக்கு
உடலில்
ஏதோ
தவறு
நிகழப்போகிறது
என்ற
ஒருவித
அழிவின்
உணர்வை
உணரக்கூடும்.
எனவே
உங்களுக்கு
திடீரென்று
மனதில்
உயிரைப்
பற்றிய
ஒருவித
கவலை
திடீரென
எழுமாயின்,
உஷாராகிக்
கொள்ளுங்கள்.
கை
பலவீனம்
அல்லது
அசௌகரியம்
மாரடைப்பு
ஏற்படவிருக்கும்
ஒருவருக்கு
ஒரு
வாரத்திற்கு
முன்பிருந்தே
கைகள்
பலவீனமாக
இருப்பது
போல்
இருக்கும்.
அதேப்போல்
தொண்டை
அல்லது
மார்பில்
லேசான
வலி,
இரைப்பை
ரிஃப்ளக்ஸ்,
அஜீரணம்
மற்றும்
நெஞ்செரிச்சல்
ஆகியவற்றுடன்
குழப்பமடையலாம்.
இது
தவிர,
முதுகு,
கழுத்து,
தாடை,
வயிறு
போன்ற
பகுதிகளிலும்
வலி
அல்லது
அசௌகரியத்தை
அனுபவிக்கலாம்.
ஆனால்
இந்த
அறிகுறிகள்
அனைத்தும்
ஒருவருக்கு
ஒருவர்
மாறுபடும்.
மாரடைப்பு
வந்தால்
எவ்வாறு
நடந்து
கொள்வது?
மாரடைப்பு
ஏற்பட்டு
உங்களால்
முடிந்தால்,
ஆஸ்பிரின்
மாத்திரையை
உடனே
எடுத்து
உங்களுக்கு
அருகிலுள்ள
மருத்துவமனையில்
உள்ள
அவசர
மருத்துவ
சேவைகள்
(EMS)
ஊழியர்களை
அழைக்கவும்.
உங்களுக்கு
மாரடைப்பு
ஏற்பட்டிருந்தால்,
உங்கள்
இதயத்தில்
தேவையற்ற
அழுத்தத்தைத்
தவிர்ப்பதற்காக
ஆம்புலன்ஸ்
வரும்
வரை
மனதை
அமைதியாக
வைத்து
காத்திருக்க
வேண்டும்.
ஒருவேளை
நீங்கள்
மாரடைப்பு
வந்த
ஒருவருக்கு
அருகில்
இருந்து,
அந்த
நபர்
மயக்கமுற்று,
சுவாசிக்காமல்,
இதய
துடிப்பு
இல்லாமல்
இருந்தால்,
உடனே
சிபிஆரைத்
தொடங்குங்கள்.
இது
தவிர,
அவசர
மருத்துவ
உதவிக்கு
உடனே
அழைப்பு
விடுங்கள்.
[ad_2]
Source link