முன்னணி இயக்குநர் ரோஹித் ஷெட்டியிடம் மன்னிப்பு கோரியுள்ளார் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்.
மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். இவருடைய 'பிரேமம்' திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இவர் 'சென்னை எக்ஸ்பிரஸ்' படம் வெளிவந்தபோது, அதில் தமிழ் குறித்துக் காட்டியிருப்பது தொடர்பாக சில கருத்துகளை முன்வைத்தார். இதனால் 'சென்னை எக்ஸ்பிரஸ்' இயக்குநர் ரோஹித் ஷெட்டிக்கும், அல்போன்ஸ் புத்திரனுக்கும் பிரச்சினை ஏற்பட்டது.