தீவிரமாக
இந்தியாவில்
மகாராஷ்டிரா,
கர்நாடகா,
ஆந்திரா,கேரளா,
தமிழகம்
ஆகிய
மாநிலங்களில
கொரோனாவின்
தாக்கம்
அதி
தீவிரமாக
உள்ளது.
கர்நாடகாவில்
மே
மாதத்திலிருந்து
முழு
ஊரடங்கு
கடைப்பிடிக்கப்பட்டு
வருகிறது.
அதே
போல
தமிழகத்திலும்
தளர்வுகள்
இன்றி
ஊரடங்கு
உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பலர்
பலியாகினர்
கடந்த
சில
நாட்களாகவே
தமிழ்
திரையுலகினரை
மட்டுமன்றி
இந்திய
திரை
உலகத்தினருக்கும்
கொரோனா
வைரஸ்
பாதிப்பு
ஏற்பட்டு
வருகிறது
என்பதும்
அவர்களில்
சிலர்
பரிதாபமாக
பலியாகி
வருகின்றனர்
என்பது
பெரும்
அதிர்ச்சியாகவே
உள்ளது.
கொரோனா
உறுதி
இந்நிலையில்
பிரபல
தெலுங்கு
நடிகர்
ஜூனியர்
என்டிஆர்
கடந்த
10ந்
தேதி
கொரோனாவால்
பாதிக்கப்பட்டு
தனது
வீட்டிலேயே
தனிமையில்
இருந்தார்.
அவரும்
அவருடைய
குடும்பத்தினரும்
தனிமைப்படுத்திக்
கொண்டதாக
தனது
ட்விட்டரில்
பதிவிட்டு
இருந்தார்.
கொரோனாவிலிருந்து
மீண்டார்
இந்நிலையில்,
தற்போது
தனது
ட்விட்டர்
பக்கத்தில்
கொரோனாவிலிருந்து
மீண்டுவிட்டதாக
கூறியுள்ளார்.
அதில்,
கொரோனா
பரிசோதனை
மேற்கொண்டதில்,
நெகட்டிவ்
என்று
வந்துள்ளது
இதை
மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக்
கொள்கிறேன்.
எனக்காக
பிரார்த்தனை
செய்த
அனைவருக்கும்
நன்றி,
கிம்ஸ்
மருத்துவமனையைச்
சேர்ந்த
மருத்துவர்
டிஆர்
பிரவீன்
குல்கர்னி
மற்றும்
மருத்துவர்
வீரு
ஆகியோருக்கு
இந்த
நேரத்தில்
எனது
நன்றியை
தெரிவித்துக்
கொள்கிறேன்.
அவர்கள்
என்னை
மிகவும்
நன்றாக
கவனித்துக்கொண்டார்கள்
என்று
கூறியுள்ளார்.
பதற்ற
படாதீர்கள்
கொரோனாவின்
தாக்கம்
மிகவும்
தீவிரமாக
உள்ளது.
ஆனால்
இதற்கு
நல்ல
கவனிப்பு
,
நல்ல
மனநிலையுடன்
இருந்தால்
இந்த
நோயை
வெல்ல
முடியும்.
உங்களின்
சக்தியே
உங்களின்
மிகப்பெரிய
ஆயுதம்,
வலுவாக
இருங்கள்
பதற்ற
படாதீர்கள்
என்று
ஜூனியர்
என்டிஆர்
அந்த
ட்விட்டர்
பதிவில்
கூறியுள்ளார்.