தேவையானவை:
துவரம் பருப்பு – 1 கப்
கடலைப்பருப்பு- ½ கப்
பாசிப்பருப்பு- 3 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 10
உப்பு – தேவைக்கேற்ப
வாழைப்பூ நறுக்கியது- 1 கப்
மஞ்சள் தூள்- 2 சிட்டிகை
தாளிக்க:
எண்ணெய்- 50 கிராம்
கடுகு- 2ஸ்பூன்
உளுத்தம் பருப்பு- 1 ஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
பெருங்காயப்பொடி- 4 சிட்டிகை
செய்முறை:
முதலில் வாழைப் பூவை நன்கு பொடியாக நறுக்கி தயிரில் போட்டு வைக்க வேண்டும். பிறகு வேகவைத்துப் பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பருப்புகளை நன்கு ஊற வைத்து பிறகு அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கெட்டியாக நொர நொரவென்று அரைத்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேகவைக்க வேண்டும். நன்கு ஆறவிட்டு உதிர்த்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு முதலியவற்றைத் தாளித்து, வேகவைத்து உதிர்த்து வைத்துள்ள பருப்பை அதில் சேர்க்கவும். பிறகு வாழைப் பூவையும் சேர்த்து நன்கு பிரட்டி எடுக்க வேண்டும். வாழைப் பூ அதன் துவர்ப்பின்றி சுவையாக இருக்கும். குழந்தை முதல் பெரியவர் வரை விரும்பும் உணவு இது.
Source link
www.dinakaran.com