Home Sports விளையாட்டு செய்திகள் ”வீரர்களிடம் நான் இதைத்தான் சொன்னேன்”-வெற்றிக்கு பின் கேப்டன் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி!

”வீரர்களிடம் நான் இதைத்தான் சொன்னேன்”-வெற்றிக்கு பின் கேப்டன் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி!

0
”வீரர்களிடம் நான் இதைத்தான் சொன்னேன்”-வெற்றிக்கு பின் கேப்டன் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இரு அணிகள் இடையே வெல்லிங்டனில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த முதல் டி20 போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 2-வது போட்டி மவுண்ட் மாங்கானுவில் இன்று நடந்தது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடி சதம் விளாசிய சூர்யகுமார் யாதவ், 111 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இஷான் கிஷன் 36 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து தரப்பில் டிம் சவுத்தி 3 விக்கெட் வீழ்த்தினார்.

image

இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி தரப்பில் கேப்டன் கேன் வில்லியம்சன் (61 ரன்கள்), டெவோன் கான்வே (25 ரன்கள்) தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். 

இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய தீபக் ஹூடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

வெற்றிக்குக்கு பின்னர் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், “மிகவும் சிறப்பாக விளையாடினோம். குறிப்பாக சூர்யகுமார் யாதவ்க்கு இது சிறப்பான இன்னிங்ஸ். ஒருவர் மட்டுமே சிறப்பாக ஆடும் நிலை எல்லா நேரத்திலும் சரியாக அமைந்துவிடாது. இன்னும் சில பேட்ஸ்மேன்கள் கூடுதல் ரன்கள் சேர்க்க வேண்டும். வீரர்கள் புரபஷனலாக இருக்க வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு. மகிழ்ச்சியுடன் விளையாட சொன்னேன். எல்லா வீரர்களும் இந்த அணியில் எனக்கு ஏற்கனவே பரிட்சையமானவர்கள். ஒவ்வொருவரும் மற்றவர்களின் அபார ஆட்டத்தால் மகிழ்ச்சி அடைவார்கள். அடுத்தப் போட்டியில் எவ்வித மாற்றம் இருக்கும் என்பதை இப்போது கூற முடியாது. எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here