பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தலைவி’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஏற்கனவே ஒரு சில ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு அதன் பின் திடீர் என மாற்றப்பட்டது என்பதும் தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பதும் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத், எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமி ஆகியோர் நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதனை படக்குழுவினர் மறுத்தனர் என்பதும் திரையரங்குகளில் தான் இந்த படம் வெளியாகும் என்று உறுதிபடக் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் ‘தலைவி’ திரைப்படத்தின் சென்சார் தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் தமிழ் பதிப்பிற்கு சென்சார் அதிகாரிகள் ’யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர் என்றும் தெலுங்கு மற்றும் ஹிந்தி பதிப்புகளின் சென்சார் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘தலைவி’ திரைப்படம் சென்சார் செய்யப்பட்டதை அடுத்து விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.