[ad_1]
“எங்க அம்மா இதெல்லாம் என்னோட ஆத்ம திருப்திக்கு பண்றாங்க. அவங்க உண்மையாவே என்னைய நினைச்சு பெருமைப்பட்டா கண்ல தண்ணி வர ஆரம்பிச்சுடும்” என சொல்லும் இடத்தில் இன்னும் அழகு.
இத்தனை ஆண்டுகள் கழித்து நஸ்ரியாவுக்குத் தெலுங்கில் முதல் படம். வீட்டுக்குள் ஒரு பொய்யை மறைத்து வாழ வேண்டிய கதாபாத்திரம். நஸ்ரியாவின் க்யூட் எக்ஸ்பிரசன்களை கொஞ்ச நேரமே காட்டி போங்கடித்துவிட்டு, எமோசனலாக அந்தக் கதாபாத்திரத்தை மாற்றிவிட்டார்கள்.
எதிர்மறை கதாபாத்திரங்கள் இல்லாத படத்தில் துணை நடிகர்கள்தான் எல்லாமே. அந்த வகையில் இந்தப் படத்தில் ஒவ்வொருவரும் அவ்வளவு யதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள். நரேஷ், ரோஹினி, அழகம் பெருமாள், நதியா, ஹர்ஷ் வர்தன், அனுபமா, குட்டி நானி, குட்டி நஸ்ரியா, ப்ருத்விராஜ், ராகுல் எனப் பக்காவான நடிகர்கள் தேர்வு.
‘Mental Madhilo’, ‘Brochevarevarura’ வரிசையில் இயக்குநர் விவேக் ஆத்ரேயாவிற்கு இந்தப் படமும் அட்டகாசமாக அமைந்திருக்கிறது. தன் முந்தைய படங்கள் தொடர்பான சின்னதொரு சுவாரஸ்யத்தையும் இதிலும் இணைத்திருக்கிறார். அடுத்தடுத்த காட்சிகளை யோசிக்கவிடாமல், சின்ன சின்ன ட்விஸ்ட்டுகளை படம் முழுக்க விதைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார். சுற்றிச் சுற்றி சொல்லப்படும் கதையில், இடைவேளைக்குப் பிறகுதான் நிஜக்கதையே ஆரம்பிக்கிறது என்பது தனிக்கதை.
[ad_2]
Source link
cinema.vikatan.com
கார்த்தி