சேத்தன் சர்மா கடந்த 2020-ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக அறிவிக்கப்பட்டார். சுனில் ஜோஷி, ஹர்வீந்தர் சிங், தெபஷிஸ் மொஹந்தி, அபேய் குருவில்லா என சேத்தன் சர்மாவின் குழுவில் ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒரு பிரதிநிதி என மொத்தம் ஐந்து பேர் கொண்ட தேர்வுக்குழு செயல்பட தொடங்கியது. இந்தத் தேர்வுக்குழுவைத்தான் பிசிசிஐ இப்போது கலைத்திருக்கிறது.
தேர்வுக்குழு பற்றிய சர்ச்சைகளும் பரபரப்புகளும் இந்திய கிரிக்கெட்டுக்கு புதிதல்ல. இந்திய அணியின் முதல் வெளிநாட்டு பயிற்சியாளரான ஜான் ரைட்டே தனது புத்தகத்தில் இந்திய தேர்வுக்குழுவையும் அதன் தேர்வு முறையையும் கடுமையாகச் சாடியிருப்பார்.
என ஜான் ரைட் இந்திய தேர்வுக்குழுக்களை பற்றி அப்போதே சாட்டையைச் சுழற்றியிருக்கிறார்.
சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு கலைக்கப்பட்டிருக்கும் இச்சமயத்தில் யாரும் ஜான் ரைட்டை போல வந்து இன்னும் பேசவில்லை. ஆயினும், தேர்வுக்குழு சார்ந்து சில பிரச்னைகளும் அதிருப்திகளும் இருப்பதாகவே தெரிகிறது. 2020 டிசம்பரில் சேத்தன் சர்மா தலைவரானார். இந்தத் தேர்வுக்குழு தெரிவு செய்து அனுப்பிய அணிகள் ஒரு பெரிய தொடரை கூட வெல்லவில்லை என்பது இந்தக் குழுவின் மீதான அதிருப்திக்கு மிக முக்கியமான காரணமாக இருந்திருக்கக்கூடும்.