HomeEntertainmentTamil LyricsBest Tamil Kavithaigal and Tamil Quotes

Best Tamil Kavithaigal and Tamil Quotes


Here are the latest Collections of Best Tamil Kavithaigal and Tamil Quotes in தமிழ் Language.

Best Tamil Kavithaigal and Tamil SMS

Tamil Kavithai

Get the Latest Collections of Tamil SMS, Kavithai and Quotes in Tamil Font – Specially for Social Status and Stories.

தமிழ் SMS and Status

👇👇👇👇👇👇👇


எவரொருவரும்
உங்கள் வாழ்க்கைப் பயணத்தை
புரிந்து கொள்ளப் போவதில்லை
நீங்கள் இங்கு வாழ்வது
உங்களது வாழ்க்கையை
வாழத்தானே தவிர
ஒவ்வொருவரும் உங்களை
புரிந்து கொள்ள அல்ல
என்பதை மறவாதீர்கள்


சிறந்த பக்குவம் என்பது
சொல்வதற்கு நம்மிடையே
பதில்கள் நிறைய இருந்தும்
புரிதல் இல்லாதவர்கள்
முன் மௌனத்தை
தேர்ந்தெடுப்பது ஆகும்


மாற்றங்கள் யாவும்
காயத்தின் முடிவிலே
தொடக்கம் பெறுகின்றது


வாழ்க்கையும்
ஒருவகை கனவுதான்
உண்மை தெரிவதற்குள்
உன்னை ரசித்து கொள்


சொற்களின்
அர்த்தங்களை விட
மௌனத்தின்
அர்த்தங்களே அதிகம்


ரசிப்பதை எல்லாம்
அடைய நினைக்கிறோம்
அடைந்ததை எல்லாம்
ரசிக்க மறக்கிறோம்


நாளைய வாழ்க்கையை
வாழ்ந்து விட
இன்றைய வாழ்க்கையை
சரியாக வாழ வேண்டும்


விடாமுயற்சியில் நடைபயின்று
தன்னம்பிக்கையை விதையாக்கு
இலக்கினை குறிவைத்து
பயிற்சியைப் பாடமாக்கு
துணிவை முன்னிருத்தி
துதிப்பாடாமல் முன்னேறு
தோல்வியில் வினாயெழுப்பி
வாழ்வியலை அடிப்படையாக்கு
சோதனையை மூலதனமாக்கி
வெற்றிக்கொடி கட்டு


நம்முடைய
எண்ணமும்
சிந்தனையும்
செயலும்
தெளிவாக இருந்தால்
யாராலும் நம்மை
மாற்றிட முடியாது


பூக்கள் நிறைந்த
சோலையல்ல
என் வாழ்க்கை
மாற்ற தான்
நினைக்கிறேன்
அதில் மாறியது
நான் மட்டுமே


காலங்கள் கடந்தும்
காலாவதி ஆகிவிடாத
மருந்து
அன்பானவர்களின்
நினைவுகள் மட்டுமே


சாதிக்க முடியாத
இலக்கை
வாழ்க்கை கொடுக்கும்போது
அழிக்கவே முடியாத
தடயத்தை
அந்த வாழ்க்கையில்
பதியவைத்துவிட்டு
செல்வது தான்
திறமையின் சிறப்பு


ஓவ்வொருவர் வாழ்க்கையும்
அழகு தான்
வெவ்வொரு கோணத்தில்
பார்க்கையில்


நாம் கவனிக்கப் படுகிறோம்
என்ற உணர்வே
நம் செயல்களை
மாற்றியமைக்கவும் வல்லது
ஆனால் தொடந்து
கவனிக்கப்படுகிறோம்
எனும் போது
நம் இயல்பு கெடவும்
வாய்ப்புண்டு


சிலருக்காக சிலரை
பிடிப்பது போல் நடிப்பதும்
சிலருக்காக சிலரை பிடிக்காதது
போல நடிப்பதும் தான்
இன்றைய உறவுகள்


நம்ம யாருக்கும்
மேலவும் இல்ல
நம்ம யாருக்கும்
கீழவும் இல்ல
யாருக்கும்
ஈக்வழும் இல்ல
நம்ம தனி தான்


உரிமைகள்
ஊமையாகின்ற போது
உறவுகள்
உணர்வுகளற்று போகிறது


பெண்களுக்குள்
இருக்கும் குழந்தைதனத்தை
தெரிந்தவர்களிடத்தில் எல்லாம்
வெளிப்படுத்தமாட்டார்கள்
மனதிற்கு நெருங்கியவர்களிடம்
மட்டுமே வெளிப்படுத்துவார்கள்


இழிவாக நினைத்தவர் முன்
இமயமாக நிற்க வேண்டும்
ஊதி என்னைத் தள்ளியவர் முன்
உயர்ந்து எழ வேண்டும்


சில பிரச்சனைகளுக்கு
தற்காலிக தீர்வு தூக்கம்
பல பிரச்சனைகளுக்கு
நிரந்தர தீர்வு மௌனம்


வாழ்ந்து கொண்டிருப்பதென்னவோ
நாம்தான் ஆனால்
நமக்கான வாழ்க்கையை
ஒரு நாளாவது வாழ்ந்தோமா
என வாழ்க்கையை
திரும்பிப் பார்த்தால்
பெரும்பாலும் மிகப்பெரிய
வெறுமையே மிஞ்சும்


என்னை நீ
புரிந்துக்கொள்வாய்
பிடித்தவர்கள் சொல்லும்
போது இதை மீறி எதயும்
கேட்க தோனாது


ஏதோ ஒரு விஷயத்தை
மனதில் நினைத்து ஏங்கி
மற்ற எல்லா விஷயங்களையும்
இழந்து விடுகிறோம்


தன் வார்த்தைக்கு
கட்டுப்பட்டு
நடப்பவர்களையே
நல்லவர்கள் என
புகழும் இந்த உலகம்


நாம் விலகினாலும்
தேடி வந்து பேசும்
சில அன்பான உள்ளங்களுக்கு
தேவைக்காக பழகும்
சுயநலம் ஒருபோதும்
இருக்க வாய்ப்பில்லை
அன்பு ஒன்றே இலக்காக


ஒரு விஷயத்தை பற்றி
நாம் யோசிக்க
வேண்டுமென்றால்
அதற்கு மதிப்பு
இருக்க வேண்டும்
தகுதி இல்லாத
ஒன்றை பற்றி
யோசித்து
நம் நிம்மதியை
இழந்து விடக்கூடாது


ஆறுதல் ஏதுமின்றி
அழுது முடித்த பின்பு
வரும் நம்பிக்கைக்கு
பலம் சற்று அதிகம் தான்


விடையறியாத கேள்விகளும்
புரிந்து கொள்ள முடியாத
சில புரிதல்களும் தான்
வாழ்க்கை இன்னும்
இருக்கிறது
காத்திரு என்கிறது


வாழ்க்கையும்
வரலாறுமாதிரி
ரொம்ப ஆராஞ்சமுனா
கொழம்பி போயிருவோம்


நம்ம மனசுக்கு
புடிச்ச மாதிரி
பேசுறவங்க எல்லாம்
நல்லவங்களும் இல்ல
பிடிக்காத மாதிரி பேசுறவங்க
எல்லாம் கெட்டவங்களும் இல்ல


பொய்யும்
சில நேரம்
புன்னகையை
பூசிக் கொள்ளும்
புன்னகையும்
சில நேரம்
பொய்யை பூசிக்கொள்ளும்


அடுத்தவர்களுக்கு
பிடிக்கவில்லை
என்பதற்காக
என் சுயத்தை
நான் இழக்க முடியாது


நாம் நிராகரிக்க படும்
இடத்தில்
அல்லது
நம் மீது நம்பிக்கையின்றி
பழகும் வட்டத்தில்
இருந்து
விலகிச் சென்று விடுங்கள்
நமது அருமையை
காலம் ஒருநாள்
எடுத்துக்காட்டும்


பல கெஞ்சல்கள் கூட
பிடித்தவர்களின்
கோபத்தை கட்டுப்படுத்தும்
மருந்து தான்
சிலரிடம் மட்டும்


எது நடந்தாலும்
சிரித்து விட்டு
கடந்து செல்
வாழ்க்கை வசமே


என் வாழ்வின்
ஓவ்வொரு தேடலிலும்
ஏதோ ஒன்று கிடைக்கிறது
நான் தேடியதை தவிர


வாழ்க்கையில்
அதிகம்
ஆசை படாதீர்கள்
ஆசை வளர்க்காதீர்
இறுதியில் என்னவோ
ஏமாற்றமே


பிடித்தவர்களிடம்
பிடிவாதமாக
வம்பு இழுத்து
செல்லமாக
சண்டையிடுவதில்
அலாதி ஆனந்தமே


சிரித்து பேசினால் தான்
அன்பானவர் என்று
அர்த்தம் இல்லை
ஏனென்றால்
அன்பு சிரிப்பில் இல்லை


அடுத்த நொடி
மறைத்து வைத்திருக்கும்
ஆச்சரியங்களே
இந்த வாழ்க்கை
எந்த நிமிடமும்
முடிந்து போகும்
அது வரை
அன்பை விதைத்து
அறுவடை செய்


நம் வாழ்க்கையில்
இருந்து யாரை
விலக்கி வைக்க
வேண்டும் என்பதை
சிலரின் நடத்தையே
தீர்மானிக்கிறது


எதையும்
நினைக்காம இருக்கிறது
ரொம்ப நல்லது
நம் மனசுக்கு


புரியாதவர்களுக்கு
புரிய வைக்க
நினைப்பதை விட
புரியாத விஷயம்
புரியாதவர்களுக்கு
புரியாமல் இருப்பதே மேல்


என் வாழ்க்கையில்
புரியா வினாக்களுக்கும்
புரிந்த வினாக்களுக்கும்
மத்தியில்
வினாவாகவும்
விடையாகவும் நான்


அனுபவம் இல்லாத
வாழ்க்கை இல்லை
அனுபவிக்கலைனா அது
வாழ்க்கையே இல்ல


ஒவ்வொரு விடியலும்
உனக்காக
இல்லையென்றாலும்
விடியலுக்கான ஏதோவொன்றை
உனக்காக தந்துவிட்டுத்தான்
செல்கிறது


சில உறவுகள்
நிலைத்திருக்க
வேண்டுமென்றால்
புரிதலுடன் பொறுமையும்
அவசியமானது


இந்த உலகில்
எதை எதையோ
தேடி அலையும்
மனதிற்கு
இறுதியில் தேவைப்படுவது
அமைதி மட்டுமே


என்னை வேண்டாமென்று
விட்டு விலகியவர்கள்
மீண்டும் தேடி
வரும் போது
திரும்பி கூட
பார்க்காமல் செல்லும்
அளவிற்கு திமிருண்டு எனக்கு


தேடும் போதெல்லாம்
நாம் கிடைக்கிறோம்
என்பதால்
ஏனோ
நம்மை அடிக்கடி
தொலைக்கிறார்கள்


இல்லாததை மட்டும்
அழகு என்று நினைத்து
கொண்டிருந்தால்
இருப்பது எதுவும்
அழகாய் தெரிவதில்லை


நடக்குறது எல்லாமே
நல்லதுக்கு தான்
நடிக்கிற எதையுமே
கண்டுக்காத வரைக்கும்


நம்ப வாழ்க்கையில
சில பேர் எப்படி
உள்ள வராங்க எதுக்கு
வெளியே போறாங்கனு
ஒன்னுமே புரிய மாட்டிங்குது


உண்மை மடிந்து
கொண்டிருக்கையில்
உறவுகள் பொய்யோ
தேடல் நிறைந்த வாழ்க்கையில்


காலத்திற்கு தகுந்த மாதிரி
மாறுனாதான் நாகரிகம் என்ற
காலம் போய்
ஆளுங்களுக்கு தகுந்த மாறி
மாறுனாதான் நாகரிகம் என்ற
காலக்கொடும வந்துருச்சு


அன்பு என்பது பொது
நீங்கள் எதிர்பார்க்கும் நபரிடம்
கிடைக்கவில்லை என்பதால்
அன்பிற்கு ஏன்
இந்த அனாதை பட்டம்


எல்லோரும்
நல்லவர்கள் தான்
ஆனால்
எல்லா நேரங்களிலும்
நல்லவராக இருப்பார்கள்
என நினைப்பது
தான் தவறு


இகழ்ச்சியை கண்டு
மனம் தளராமல்
புகழ்ச்சியை கண்டு
மனம் மயங்காமல்
எந்நிலையிலும்
தன்னிலை மாறாமல்
இருப்பதே சிறப்பு


யாருக்கு எப்போது
என்ன நடக்கும்
என்றே தெரியாது
இருக்கும் வரை
வன்மம் இல்லாமல்
அன்பை மட்டுமே
விதைப்போம்


உனது கவலைகளை
ஒரு போதும் மற்றவர்களின்
அனுதாபத்திற்காக
பயன்படுத்தாதே


நாம் எப்படி
இருக்க வேண்டும்
என்பதை
நம் எதிரே
நிற்பவர்களின்
குணங்களும் செயல்களுமே
தீர்மானிக்கிறது
நாம் அன்பாக இருப்பதும்
திமிராக இருப்பதும்


தயங்குபவர்களுக்கும்
பயப்படுபவர்களுக்கும்
இந்த உலகில்
எதுவும் சாத்தியமில்லை
துணிவும் முயற்சியும்தான்
தன்னம்பிக்கையின்
உச்சக்கட்டம்
வெற்றியின் முதற்படி


நம்பிக்கை
இழக்கும் போது
இறைவனிடம்
தஞ்சமடைகிறது மனம்


விருப்பத்தை குறைத்து
கொள்ளுங்கள்
விளைவுகள் குறையும்
ஆசையை குறைத்து
கொள்ளுங்கள்
ஆபத்துகள் குறையும்


எவருக்கும் எப்போழுதுமே
கிடைக்கும் நிலையில்
இருக்காதீர்கள்
தேடப்படும் வரை
மதிக்கப்படுவீர்கள்


உண்மையாக
இருப்பது போல்
உனக்கு நடிக்க தெரிந்தால்
உன்னை நம்புவது போல்
நடிக்க எனக்கும் தெரியும்


கனவுகளும்
கற்பனைகளும் தான்
பலரின் வாழ்க்கையை
ஆனந்தப்படுத்துகிறது


அந்தந்த நேரங்களில்
அனைவரும்
ஏற்குப்படியான
ஒரு நல்ல கதை
சொல்லத் தெரிந்தால்
நானும் நல்லவள்
தான் போல


நிராகரிப்பு எவ்வளவு
பெரிய வலி
அவமானம் என்பது
அடுத்தவர்கள்
நம்மை நிராகரிக்கும்
போது தான் புரிய வரும்


வேண்டாமென்று
தூக்கி எறிந்தவர்கள் முன்
நீ மட்டும் தான்
வேண்டும் என்ற அளவுக்கு
வாழ்ந்து காட்டனும்


எத்தனை உறவுகள்
நம்மை சுற்றி இருந்தாலும்
அத்தனையும் மனதுக்கு
பலம் சேர்ப்பதில்லை
பயமின்றி
வாழ்க்கையை வாழ
யாரோ ஒருவரின் ஆறுதலும்
துணையுமே தேவைப்படுகிறது


நம்மளோட பாசத்தை
மட்டும்
வேணும்னு நினைக்கிறவங்க
நம்ம கோவத்தை
புரிஞ்சுக்கவே மாட்றாங்க


கோபப்பட வேண்டிய
இடத்திலும்
கதறி அழ வேண்டிய
இடத்திலும்
புன்னகையுடன் கடந்து
செல்வதற்கு பெயர் தான்
பக்குவம்


வந்ததை வரவில் வைத்து
சென்றதை செலவில் வைத்து
இருப்பதை கொண்டு
மனநிறைவோடு
இன்பமாக வாழ்வோம்


அழகு என்பது
உருவத்தில் அல்ல
நடத்தையில் இருக்கிறது
அடுத்தவர்களை
தரம் தாழ்த்தி
பேசுவதெல்லாம்
நம் தரத்தை
நாமே குறைத்துக் கொள்வது
என்பதை அறிக


நிஜத்தை வைத்துக் கொண்டு
நிழலை தேடிச் செல்கிறோம்
வாழ்க்கை என்னும் பயணத்தில்


யாரும் பார்க்கவில்லை
என்று நினைத்து
குற்றங்களை
மேலும் மேலும்
செய்து கொண்டே
இருக்காதே
எங்கே சென்று
ஒளிந்தாலும்
அதன் பலனை
அனுபவித்தே தீரவேண்டும்


நம்மை கட்டுபடுத்த
முடியாத
நம்மால் எதையும்
கட்டுப்படுத்த முடியாது


வார்த்தைகளை தேடி
களைத்து போனேன்
சில உணர்வுகள
வெளிபடுத்த
வார்த்தைகளே
இல்லை போல


வெற்றியின் போது
கை தட்டியவர்கள்
தோல்வியிலும் கைக்கொடுத்தால்
சோதனையில் இருந்து
எளிதாக சாதனை படைக்கலாம்


நம்மை விட்டு
யாராவது பிரியும் போது
நமக்கு வலித்தால் அதில்
அவர்கள் காட்டிய
பாசம் தெரியும்
அப்படி நமக்கு
வலிக்கவில்லை என்றால்
அந்த உறவின் வேஷம்
தான் காரணமா இருக்கும்


சுயநலத்தில் ஓடும்
உலகம் இது
உன் சுய நலத்தை
விரும்பும் மனங்களை
தேடுவது கடினம்


தோல்விகள் இல்லாமல்
வெற்றியை அடைய முடியாது
தோல்வி என்றும்
வீரனுக்கு அழகு தான்
துவண்டு போகாமல்
முயற்சியை கை விடாமல்
சாதித்து காட்டுவோம்


வாழ்க்கையில் வரிசையாக
ஏமாற்றங்களை சந்தித்ததால்
புதியதாக வரும்
துன்பமோ
ஏமாற்றமோ
துரோகமோ
பெரிதாக பாதிப்பை
தர போவதில்லை


சில ஏமாற்றங்களும்
தோல்விகளும்
தான் பெரும்பாலானோர்
கோபத்திற்கு காரணம்
அளவுக்கு மீறிய கோபம்
நம்முடைய நற்குணங்களை
எளிதில் மறைத்து விடுகிறது


வரமாக கிடைத்த
உறவுகளை
உங்கள் அலட்சியத்தால்
இழந்து விடாதீர்கள்
காலம் கடந்த பின்
தவறை உணர்ந்து
ஒரு பயனும் இல்லை


தன் விருப்பத்தை
தியாகம் செய்து
நம் உணர்வுகளுக்கு
மதிப்பளிக்கும்
உறவை மட்டும்
என்றும் இழந்து விட கூடாது


கனவில் நிஜத்தை தேடுவதும்
நிஜத்தில் கனவு காண்பதுமே
வாடிக்கையாகவும்
வாழ்க்கையாகவும்
மாறிப்போனது


காதலில் பொறுமை
எவ்வளவு அவசியமோ
அதைவிட நேரம்
தவறாமை முக்கியமானது


ஒரு நிமிடத்தில்
எடுக்கும் முடிவு
நம் வாழ்க்கையில்
என்ன வேணாலும் செய்யும்
சில நேரங்களில்
நம்மை வச்சு கூட செய்யும்


எதிரியை எதிரே வை
துரோகியை தூர வை
உண்மையான விஸ்வாசம்
கொண்டவர்களை மட்டும்
இதயத்தில் வை


சிலருக்காக நாமளும்
நமக்காக சிலரும் செய்யும்
சின்ன சின்ன
செயல்கள் மட்டுமே
வாழ்க்கையை அவ்வப்போது
அழகாக்கி கொண்டிருக்கிறது


உனக்கு என்ன எண்ணம்
தோன்றுகிறதோ
அதுதான் உன் வாழ்க்கையை
தீர்மானிக்கும்
எண்ணம் போல் வாழ்க்கை


புதியது வந்தால
பழையதின் அருமை
தெரியாது
ஆனால் காலத்தின்
கட்டாயத்தினால்
பழையதின் அருமை
தானாக புரியும்


நல்ல எண்ணங்கள்
நல்ல செயல்கள் சேர்ந்து
உன் வாழ்க்கையை அழகாக்கும்


வாழும் இந்த வாழ்க்கையில்
எதுவும் நிரந்தரம் இல்லை
எதிலும் உண்மையும் இல்லை


உனது கனவுகளை
நீ நனவாக்க தவறினால்
பிறர் அவர்களது கனவுகளை
நிறைவேற்ற உன்னை
பயன்படுத்திக்கொள்வார்கள்


சில நேரங்களில்
பிடிவாதமாக இருப்பது தான்
காரியங்களை சாதிப்பதற்கான
ஒரே வழி


சில வரிகள் வெறும்
வார்த்தைகளல்ல
வெளிப்படுத்தயியால
உணர்வுகள்


இதுவும் கடந்து போகும்
வார்த்தையில் இலகு
வாழ்க்கையில் கடினம்


ஒன்றும் புரியவில்லை
புரியாத விஷயத்தை
புரிய வைக்க
நினைப்பதலோ
புரிந்த விஷயம் கூட
புரியாமல் போகிறது


நம்ம வாழ்க்கைல
நமக்காக சின்ன சின்ன
சந்தோஷம் கொடுக்கிற உறவை
சில அற்ப விடயத்திற்காக
விட்டு கொடுக்காமல் இருப்பது
நம் வரம்
புரிதல் கொண்ட நட்பில்
பிரிவுக்கு இடமே இல்லை


நாம் தேடும் ஒருவர்
நம்மை தேடும் உறவனால்
வாழ்க்கை பேரழகாகும்


அணைக்க
ஆயிரம் கைகள்
இருக்கும் ஆனால்
ஆதரவாக
உன் கையை தவிர
வேறு கைகள் இராது


இழந்த காலத்தை
மறுபடியும் அடைய முடியாது
எதிர்காலம் என்னவென்று
நம்மால் யூகிக்கவும் முடியாது
கையில் இருப்பது
நிகழ்காலம் மட்டுமே
அதை நம் வாழ்க்கைக்கு
ஏற்றவாறு
பயன்ப்படுத்தி கொள்வோம்


புரிந்தும் புரியாத மாதிரி
இருப்பவர்களிடம்
நீங்கள் தெரிந்தும் தெரியாத
மாதிரி இருக்க பழகிக்
கொள்ள வேண்டும்


நேர்மை உண்மை
இல்லாத போது
அன்பை மட்டும் வைத்து
எதையும் சாதித்து விடலாம்
என்று நினைத்து விடாதே


உன் உயர்ந்த
எண்ணம் என்னும்
அழகும் திறமையும்
இருக்கும் வரை
யாருடைய விமர்சனமும்
உன்னை ஒன்றும் செய்யாது


தெரியாத சோகத்தை
உள்ளுக்குள் வைத்து
மற்றவருக்கு காட்டிடும்
மகிழ்ச்சி மட்டுமே
நிலையானது


திறமை என்பது
யாரோ சொல்லி
வருவது அல்ல
நமக்குள் இருப்பது
அதை வெளிப்படுத்தவும்
சில அவமானங்கள்
தேவை தான்


வாழ்க்கையில
ஓண்ண விட
இன்னொன்று
பெட்டரா தான் இருக்கும்
கிடைக்கிறத
வச்சிகிட்டு தான்
சந்தோஷமா வாழனும்


உறுதியான இரும்பு கூட
தீயில் உருகும்
மனித மனம்
உறுதியான பிறகு
எதையும் விரும்பாது
எதற்கும் உருகாது


அடிக்கடி உரையாடல்கள்
இல்லை என்பதற்காக
உறவுகள் இல்லை
என்றாகிவிடாது


சில தருணங்களில்
உறவுகளை உருவாக்குகிறது
சில தருணங்களில் உறவுகளை
உடைத்தும் விடுகிறது


சில நேரங்களில்
சில இடங்களில்
பார்வையாளராக
இருப்பது மட்டுமே
சாலச் சிறந்தது


எல்லா சூழ்நிலைகளையும்
அன்பால் கடந்து
விட முடியாது
சில இடத்தில்
வம்பு தான் சரியான
தீர்வை கொடுக்கும்


வாழ்க்கையை
அழகாக ரசித்து
வாழ தெரிந்தவருக்கு
இன்பம் மட்டுமல்ல
துன்பமும் சுவாரசியமே


ஒவ்வொரு மலர்களுக்கும்
ஒவ்வொரு மனம் உண்டு
ஒவ்வொரு மனிதருக்கும்
ஒவ்வொரு குணம் உண்டு
இவை இரண்டையும்
மாற்ற முடியாது


ஒருவரால்
நிராகரிக்கபடும் அன்பு
மற்றொருவரால்
கொடுக்கப்படலாம் அன்பு
என்றும் அனாதையல்ல


என் வாழ்வில் எத்தனை
துன்பம் இருந்தாலும்
அது என் இதழ்களுக்கு
தெரிவதில்லை எப்பொழுதும்
புன்னகைத்து
கொண்டே இருக்கிறது


நினைப்பது ஒன்று
நடப்பது ஒன்று
இருந்தாலும்
ஏற்றுக்கொள்வோம்
என்ற மனநிலையில் தான்
கடந்து செல்கிறோம்


ஆயிரம் உறவுகளை
இழந்திருக்கிறேன்
ஆனாலும்
கர்வம் கொள்கிறேன்
அன்பான சில உறவுகள
இன்னும்
என் அருகிலே என்பதால்


உண்மையான
உணர்வுகளோடு
ஒருவரை நேசித்தால்
தவறான எண்ணங்கள்
வாய் வார்த்தையாக கூட
வெளிவராது


சிறிதும் சிந்தனையற்ற
மனிதனிடம்
சிரித்து கடப்பதே
சிறந்தது


உங்களுக்கு
பிடித்தாற் போல்
வாழுங்கள்
உங்களை பிடிப்பதற்காக
வாழாதீர்கள்


எல்லோருக்கும்
பிடித்தவளாக தான்
இருக்கிறேன்
இருந்தும் ஏனோ
இந்த தனிமை


நிஜமில்லாத வாழ்க்கையில்
பொய்யான சிரிப்புக்கே
அதிக மதிப்பு உண்டு
இங்கு பொய்யே
உண்மையை காட்டிலும்
அதிக அழகாக இருக்கிறது


சில பிரச்சனைகளில்
இருந்து தற்காலிகமாக
தப்பிக்க ஆகச்சிறந்த
வழி மௌனம் சாதிப்பதே


உறவுகளும் உடைபொருள்
போன்றே உடைந்தால்
மீண்டும் இணைக்கலாம்
எக்கணத்திலும்
முன்போல் வராது


என் மௌனத்தின்
வலியை யார்
உணர்கிறார்களோ
அவர்களே என்னை
உணர்ந்து கொண்டவர்கள்


அடுத்தவரை
வேதனைப்படுத்தும்
முன் தன்னை
ஒருமுறை
அந்த இடத்தில்
வைத்து யோசித்து
பார்த்தல் உத்தமம்


மனதில் பட்டதை
பேசுங்கள்
அதில் தவறு இல்லை
ஆனால்
அதை கேட்பவரிடமும்
இருப்பது மனம் தான்
என்று உணர்ந்தால்
போதும்


கடல் போல
பெரிய சந்தோஷங்கள்
தேவையில்லை
கால் நனைக்கும்
அலை போல
சின்ன சின்ன
சந்தோஷங்கள் போதும்


சரியோ தப்போ தைரியமா
பேச கத்துக்கணும்
இங்க பதில் சொல்றதுக்கு
பயந்தாலே பாதி தப்ப
நம்ம தலையில கட்டிருவாங்க


எனக்குள் எனக்கென
ஒரு உலகம்
கட்டிடங்களாலோ
கருங்கற்களாலோ
இல்லை கற்பனைகளாலும்
என் கருத்துக்களாலும்


உணர்வுகளை
புரிந்து கொண்டால்
எல்லா உறவுகளும்
உன்னதமே


விட்டுக் கொடுத்து
வாழ்றவங்கள விட
போட்டுக் கொடுத்து
வாழ்றவங்க தான்
நல்லா இருக்காங்க


எங்க போறீங்க இதோ உங்களுக்காக



Source link

tamilsms.blog

Editorial Staff

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read