Homeசினிமா செய்திகள்bigg boss 5: கமல்ஹாசனுக்கு "வேலை" போச்சு.. குறும்படம் காட்டுவதை கையில் எடுத்த ரசிகர்கள்! -...

bigg boss 5: கமல்ஹாசனுக்கு “வேலை” போச்சு.. குறும்படம் காட்டுவதை கையில் எடுத்த ரசிகர்கள்! – when will kamal release the kurumpadam of bigg boss house mates?


ஹைலைட்ஸ்:

  • பிக் பாஸ் 5 தொடரின் பங்கேற்பாளர்களின் குறும்படம் எதுவும் வெளியாகவில்லை.
  • கமல் ஹாசன் செய்யும் வேலையை தற்போது நெட்டிசன்கள் கையில் எடுத்துள்ளனர்.
  • பிரியங்கா மற்றும் பாவனி ரெட்டி குறும்படங்களை ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.


பிக் பாஸ் 5 எதிர்பார்த்ததை விட சுவாரஸ்யம் குறைவாகவே போய்க் கொண்டிருப்பதாக ரசிகர்கள் புலம்புகிறார்கள்.

முதல் நான்கு தொடரில் பிக் பாஸ் பலவகையிலும் ரசிகர்களைக் கவருவதாக அமைந்திருந்தது. ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது விறுவிறுப்பு இருந்து வந்தது. ஆனால் 5வது சீசனில் அதில் சற்று தொய்வு ஏற்பட்டிருப்பதாக பொதுவான பேச்சு அடிபடுகிறது.

5வது சீசனைப் பொறுத்தவரை பலரும் புதுமுகங்கள். சிலரை யார் என்றே தெரியாத அளவுக்கு புதுமுகங்கள், மக்களிடம் அதிகம் அறிமுகம் ஆகாதவர்கள். எனவே எதிர்பார்த்த சுவாரஸ்யம் இன்னும் வரவில்லை. அபிஷேக் ராஜா போன்ற சிலர்தான் அதிக அளவில் கன்டென்ட் கொடுத்து வந்தனர். ஆனால் அபிஷேக் ராஜாவும் இப்போது வெளியேற்றப்பட்டு விட்டார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் செய்து வந்த வேலையை ரசிகர்கள் கையில் எடுத்துள்ளார்.. அதுதான் குறும்படம் காட்டுவது. வழக்கமாக ஒவ்வொருவர் குறித்தும் அவ்வப்போது குறும்படம் காட்டி அவர்களை நெளிய விடுவார் கமல்ஹாசன். பலர் இதுபோன்ற குறும்படங்களில் சிக்கி தர்மசங்கடப்படுவதை ரசிகர்கள் பார்த்து ரசிப்பது வழக்கம். ஆனால் இந்தத் தொடரில் இதுவரை யாருக்கும் குறும்படம் காட்டாமல் இருக்கிறார் கமல்ஹாசன்.

ஆனால் ரசிகர்களால் அப்படி சும்மா இருக்க முடியாதே.. கமல் செய்து வரும் வேலையை இப்போது அவர்கள் கையில் எடுத்துள்ளனர். முதலில் பிரியங்காவுக்கு ஒரு குறும்படத்தை ரசிகர்களே தயாரித்து டிவிட்டரில் போட்டு ரகளையாக்கினார்கள். இப்போது பாவனிக்கும் ஒரு குறும்படம் காட்டி அசத்தி விட்டனர். இந்த இரண்டு குறும்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ்.

இதை வழக்கமாக கமல்தான் செய்வார். ஆனால் இந்த முறை அவர் ஏனோ அமைதியாகவே இருக்கிறார். அபிஷேக் குறித்து பல குறும்படங்களை கமல் போட்டிருக்கலாம். ஆனால் போடவில்லை. அதேபோல தாமரை விஷயத்திலும் குறும்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதுவும் வரவில்லை. பிரியங்காவையும் வெகுவாக எதிர்பார்த்தனர். அதுவும் நடக்கவில்லை.

இப்படியே கமல்ஹாசன் அமைதியாக இருந்து வந்தால் ஒவ்வொரு குறும்படமாக ரசிகர்களே ரிலீஸ் செய்து கமல்ஹாசனின் வேலைக்கு உலை வைத்து விடுவார்கள் போல என்று நெட்டிசன்கள் குறும்புத்தனமாக கலாய்த்து வருகின்றனர். இந்த சீசனில் இதுவரை வெளியேற்றப்பட்டவர்கள் குறித்து இப்போது யாரும் பெரிதாக பேசவில்லை. மாறாக, வைல்ட் கார்டில் யார் உள்ளே வரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி விட்டது.

நிச்சயம் கன்டென்ட் கொடுக்கக் கூடிய வகையில் சிலரை கூட்டிக் கொண்டு வந்தால்தான் நிகழ்ச்சி மீண்டும் சூடு பிடிக்கும், ஏதாவது பரபரப்பு நடக்கும், அப்போதுதான் வீடு களை கட்டும் என்று ரசிகர்கள் கருதுகிறார்கள். இதெல்லாம் பிக் பாஸ் காதுக்கும், கமல்ஹாசன் காதுக்கும் எப்போது எட்டும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.



Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read