Home Sports விளையாட்டு செய்திகள் Crime News in Tamil Nadu: Teenage Girl Commits Suicide by Writing a Letter | கடிதம் எழுதி வைத்து இளம்பெண் தற்கொலை

Crime News in Tamil Nadu: Teenage Girl Commits Suicide by Writing a Letter | கடிதம் எழுதி வைத்து இளம்பெண் தற்கொலை

0
Crime News in Tamil Nadu: Teenage Girl Commits Suicide by Writing a Letter | கடிதம் எழுதி வைத்து இளம்பெண் தற்கொலை

[ad_1]

Crime News in Tamil Nadu: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புலவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகள் மீனாட்சி (20) . நெய்வேலியில் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற மீனாட்சி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் மீனாட்சி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து பதறிப் போன குடும்பத்தினர் முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என்று புகாரளித்தனர்.

தற்கொலை

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேட தொடங்கினர். அப்போதுதான் அதே பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சடலமாக தூக்கில் தொங்கியது காணாமல் போன மீனாட்சிதான். உடனே உறவினர்களுக்கு சொல்லி அனுப்பினார்கள். சடலத்தை கீழிறக்கி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மீனாட்சியின் ஆடையில் ஒரு கடிதம் சிக்கியது.

suicide

அதில் என்னுடைய மரணத்திற்கு அதே ஊரைச் சேர்ந்த விஜயகுமாரி,தான் காரணம் என எழுதி இருந்தது. மேலும் விஜயகுமாரிக்கும் அதே ஊரைச்சேர்ந்த இளைஞருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகவும் அதை விஜயகுமாரின் கணவர் பாலகிருஷ்ணனிடம் மீனாட்சி தெரியப்படுத்தியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமாரி, அவரது உறவினரான சுதா என்பவருடன் சேர்ந்து மீனாட்சியை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து போன இளம்பெண் கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மேலும் படிக்க | NIGHT SHIFT செல்ல CAB-கிற்கு காத்திருந்த IT பெண்களுக்கு நேர்ந்த கதி – CCTV வீடியோ !!

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்மந்தப்பட்ட விஜயகுமாரி, சுதா ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் வழக்குப்பதிந்து இருவரையும் சிறையில் அடைத்தனர். இதனிடையே தலைமறைவாக உள்ள விஜயகுமாரியின் கணவர் பாலகிருஷ்ணனை தேடி வருகின்றனர். 

மேலும் படிக்க | பீர் பாட்டிலை உடைத்து மகனின் வயிற்றில் குத்திய கணவர் ; ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டி கொன்ற மனைவி!

உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற கீழ்காணும் எண்ணை தொடர்பு கொள்ளவும். மாநில உதவிமையம்: 104

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

zeenews.india.com

Zee News Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here