[ad_1]
மேலும் அதை மீறி தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களில் FEFSI ஊழியர்கள் அல்லாது வேறு ஊழியர்களை பயன்படுத்த முடியாது. இந்நிலையில் சில ஆண்டுகளாக இருந்து வந்த இந்த ஒப்பந்தம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
தற்போது வெளியான அறிக்கையில் குறிப்பிட்டவாறு, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர், செயலாளர்கள், துணைத்தலைவர்கள், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசினை வெல்லுங்கள்
தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும், இருவருக்கும் இடையில் காலம் காலமாக புரிந்துணர்வு ஒப்பந்தமானது இருந்து வருகிறது. அந்த வகையில் அடுத்த 3 ஆண்டுகளுக்கான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கடந்த 9. 3. 2022 இரு சாராரும் கையொப்பமிட்டார்கள்.
மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை அவமதிக்கும் வகையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளம் செயல்பட்டதால் இரு அமைப்பிற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று ( 2 .5 .2022 ) அன்று ரத்து செய்யப்படுவதாக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேற்படி தீர்மானத்தின் அடிப்படையில் ( 3 .5 .2022 ) முதல் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தங்களுக்கு தேவையான வேலையாட்கள் யாரை வேண்டுமானாலும் வைத்து படப்பிடிப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் பட வசனத்தை மேடையில் பேசிய ஜீவா!
[ad_2]
Source link