இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கமல்ஹாசன் அவர்கள் தற்போது கொரோனா சிகிச்சையில் உள்ளார் என்றும் அவரது உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. நடிகர் கமல்ஹாசன் நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுவது குறித்தும் புதிதாக தோன்றி வரும் ஒமக்ரான் என்ற வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினார். கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி செலுத்துவது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், கமல்ஹாசன் அவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதால் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு வந்த போதிலும் அவர் நலமாக இருக்கிறார் என்றும் அவர் விரைவில் வீடு திரும்பவுள்ளார் என்றும் தெரிவித்தார். எனவே தடுப்பூசி போடுவதன் விழிப்புணர்வை இன்னும் அதிகரிக்க இருப்பதாகவும் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த மக்கள் நல்வாழ்வு துறை முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்.
ரசிகர்களின் selfie மழையில் ராஷ்மிகா மந்தனா!