[ad_1]
இந்நிலையில் கடந்த நவம்பர் 19 ஆம் தேதி மூன்று வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறுவதாக பிரதமர் அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு பலரும் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில் நடிகை கங்கனா ரனாவத், வேளாண் சட்டம் வாபஸிற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் போராடிய விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்றும் குறிப்பிட்டுக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் கங்கனாவின் இந்தப் பதிவு வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி டெல்லியில் இயங்கி வரும் சீக்கிய அமைப்பான குருத்வாரா மேலாண்மை கமிட்டி சார்பில் அதன் தலைவரான மாஞ்சிந்தர் சிங் சிர்ஸா மும்பை காவல்துறையில் கங்கனா மீது புகார் அளித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிர உள்துறை அமைச்சரையும் சந்தித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாஞ்சிந்தர் சிங், கங்கனா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவசாயிகளுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையிலான கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார். போராடிய விவசாயிகளைத் தீவிரவாதிகள் என்று விமர்சித்துள்ளார். கங்கனாவுக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
எல்லாருக்கும் ஹாய்; சாரா அலிகானின் வைரல் வீடியோ!
[ad_2]
Source link