[ad_1]
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிம்பு கண்ணீருடன், ‘நெறைய பிரச்சனை கொடுக்குறாங்க. அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். என்னை மட்டும் நீங்க பார்த்துகோங்க’ என பேசியது ரசிகர்கள் அனைவரையும் கலங்க வைத்தது. இந்நிலையில் கடந்த வாரம் வெளியாகியுள்ள ‘மாநாடு’ படம் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.
இந்நிலையில் செலிபிரிட்டி ஷோவில் ‘மாநாடு’ படத்தை பார்த்த இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் படம் குறித்து, ரொம்ப cheat பண்ணிட்டாங்க என்னை. மாநாடுனு ஒரு தமிழ்ப்படம் ரிலீஸ் ஆகியிருக்கு. வந்து பாருங்கனு சொன்னாங்க. ஆனா இங்க வந்து பாத்தாதான் தெரியுது. இது வெங்கட் பிரபு டைரக்ஷனில் ஒரு ஹாலிவுட் படம். சிம்புவும், எஸ்.ஜே.சூர்யாவும் பின்னி உதறியிருக்கிறார்கள். சீரியாஸாகவே எனக்கு எழுத தெரியும், டைரக்ட் பண்ணத் தெரியும், நடிக்கத் தெரியும், ஆனால் ஏமாறத் தெரியாது. இந்த படத்துல அவ்வளவு ஏமாந்துருக்கேன்.
அற்புதமான திரைக்கதை. சிம்பு, கல்யாணி, எஸ்.ஜே.சூர்யா அனைவருமே செம்மையா பெர்ஃபார்ம் பண்ணியிருக்கிறார்கள். இதை நான் எதிர்பார்க்கவில்லை. இத்தனைக்கும் நான் படத்தின் மீதான எதிர்பார்ப்புடன் வந்தேன். எதிர்பார்ப்பு இல்லாமல் வந்து இப்படி இருந்தால் பரவாயில்லை. எதிர்பார்ப்புடன் வந்த நான், படத்தை பார்த்து, அதற்கும் மேல் மிரண்டுவிட்டேன். முதற்பாதியை விட, இரண்டாம் பாதி அற்புதம். தாங்க முடியாத அளவுக்கு சிரித்தேன். இவ்வாறு தெரிவித்துள்ளார் பார்த்திபன்.
நன்றி தெரிவித்த மாநாடு பட குழுவினர்!
[ad_2]
Source link