[ad_1]
அண்மையில் ‘மாநாடு’ படத்தின் ‘மெர்ஸைலா’ என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலை யுவனும், அவரது சகோதரி பவதாரணியும் இணைந்து பாடி இருந்தனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை யுவனின் யு1 ரெக்கார்ட்ஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அண்மையில் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் துவங்கியது.
அண்மையில் ‘மாநாடு’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தப்படத்தின் டப்பிங் பணிகளை சிம்புவும், எஸ்.ஜே. சூர்யாவும் நிறைவு செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த வாரம் ‘மாநாடு’ படத்தின் சென்சார் பணிகள் துவங்க உள்ளன.
‘மாநாடு’ படத்தில் அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞர் வேடத்தில் நடிக்கிறார் சிம்பு. அரசியல் மாநாடு ஒன்றில் நடக்கும் அதிரடியான திருப்பங்கள் கொண்ட நிகழ்வுகளை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘மாநாடு’ படம் தீபாவளி வெளியீடாக ரிலீசாக உள்ளது. ரஜினியின் ‘அண்ணாத்த’ படமும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமுத்திரக்கனி கதை சொல்லும் போது ரொம்ப பயமா இருந்தது : என் கே ஏகாம்பரம்!
[ad_2]
Source link