Home சினிமா செய்திகள் Maanaadu: ‘மாநாடு’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்: தரமான சம்பவம் இருக்கு! – silambarasan maanaadu movie dubbing work finished

Maanaadu: ‘மாநாடு’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்: தரமான சம்பவம் இருக்கு! – silambarasan maanaadu movie dubbing work finished

0
Maanaadu: ‘மாநாடு’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்: தரமான சம்பவம் இருக்கு! – silambarasan maanaadu movie dubbing work finished

[ad_1]

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு‘ படத்தில் நடித்துள்ளார் சிம்பு. கடந்த பொங்கலுக்கு சிம்பு நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன்’ படத்திற்கு பிறகு நீண்ட காலமாக இந்த படத்திற்காக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்தாண்டு தீபாவளி வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது ‘மாநாடு’.

‘மாநாடு’ படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி நடித்துள்ளார். இவர் சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். இவர்களுடன் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா மற்றும் கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

அண்மையில் ‘மாநாடு’ படத்தின் ‘மெர்ஸைலா’ என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலை யுவனும், அவரது சகோதரி பவதாரணியும் இணைந்து பாடி இருந்தனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை யுவனின் யு1 ரெக்கார்ட்ஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அண்மையில் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் துவங்கியது.

கால்ல கூட விழுறேன்.. அசிங்கமாயிடும்: அதிகாரிகளிடம் கதறிய மதுவந்தி!
அண்மையில் ‘மாநாடு’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தப்படத்தின் டப்பிங் பணிகளை சிம்புவும், எஸ்.ஜே. சூர்யாவும் நிறைவு செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த வாரம் ‘மாநாடு’ படத்தின் சென்சார் பணிகள் துவங்க உள்ளன.

‘மாநாடு’ படத்தில் அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞர் வேடத்தில் நடிக்கிறார் சிம்பு. அரசியல் மாநாடு ஒன்றில் நடக்கும் அதிரடியான திருப்பங்கள் கொண்ட நிகழ்வுகளை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘மாநாடு’ படம் தீபாவளி வெளியீடாக ரிலீசாக உள்ளது. ரஜினியின் ‘அண்ணாத்த’ படமும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமுத்திரக்கனி கதை சொல்லும் போது ரொம்ப பயமா இருந்தது : என் கே ஏகாம்பரம்!

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here