ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது.
துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 32-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே. எல். ராகுல், பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
இரு அணிகளும் இதுவரை ஐபிஎல் களத்தில் 22 முறை மோதி உள்ளன. இதில் பஞ்சாப் அணி 10 முறையும், ராஜஸ்தான் அணி 12 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்தியாவில் நடைபெற்ற முதல் பாதி சீசனில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றிருந்தது.
புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ஆறாவது இடத்திலும், பஞ்சாப் ஏழாவது இடத்திலும் உள்ளது. இரு அணிகளும் இந்த பிற்பாதி ஆட்டங்களில் வெற்றி பெற்று மற்ற அணிகளுக்கு கடுமையான போட்டி கொடுக்க வேண்டுமென்ற முனைப்புடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.