Home சினிமா செய்திகள் Radhika Apte: சினிமாவில் அதுக்கு மட்டுமே முக்கியத்துவம்: ரஜினி பட நடிகை வருத்தம்..! – i am depressed says actress radhika apte

Radhika Apte: சினிமாவில் அதுக்கு மட்டுமே முக்கியத்துவம்: ரஜினி பட நடிகை வருத்தம்..! – i am depressed says actress radhika apte

0
Radhika Apte: சினிமாவில் அதுக்கு மட்டுமே முக்கியத்துவம்: ரஜினி பட நடிகை வருத்தம்..! – i am depressed says actress radhika apte

தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக ‘கபாலி’ மற்றும் வெற்றிச்செல்வன், தோனி படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இமேஜ் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் துணிந்து நடித்து வருபவர் ராதிகா ஆப்தே.

கடந்த 2005ம் ஆண்டு இந்தியில் வெளியான வா லைஃப் ஹோ டோ ஹைசி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. ராம் கோபால் வர்மா இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான ரத்த சரித்திரம் படத்தில் நடித்து பிரபலமானார். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி ஜோடியாக கபாலி படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவரின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டுக்களையும், வரவேற்பையும் பெற்றது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதை களங்களை தேர்வு செய்து நடிக்கும் ராதிகா, சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் சினிமாவில் திறமைக்கு முக்கியத்துவம் இல்லை என்று கூறியுள்ளார். தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சினிமாவில் திறமையை விட அழகுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒரு பெண் இளமையாக இருக்கும் போது அவளுக்கு வாய்ப்புகள் வருகின்றன.

ஒரு நடிகை 30 வயதை கடந்து விட்டால், அவளின் உடல் தோற்றம் கேலிக்குள்ளாக்கப் படுகிறது. பட வாய்ப்புகள் குறைந்துவிடுகின்றன. இதில் சில நடிகைகள் 30 வயதுக்கு மேலும் சினிமாவில் நடித்து வந்தால், அவருக்கு வயதாகிவிட்டது என்று பலர் குரல் கொடுக்கத் தொடங்கிவிடுகின்றனர். இதனால், தான் பல நடிகைகள் அறுவை சிகிச்சை செய்து தங்கள் உடலை இளமையாக வைத்திருக்கிறார்கள்.

பிரஸ் மீட்டில் கெட்ட வார்த்தை பேசிய இயக்குனர் ஹரி: வெடித்த சர்ச்சை.!
நான் ஒப்பந்தமாகி இருந்த பல படங்களில் என்னை நீக்கிவிட்டு, மற்ற நடிகைகளை ஒப்பந்தம் செய்கிறார்கள். இதனால், பல பட வாய்ப்புகள் என்னை விட்டு சென்றுவிட்டன. இதனால், நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். சினிமாவில் அழகுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவதால் பல திறமையான நடிகைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டதாக ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here