நடிகர்கள் சமுத்திரக்கனி மற்றும் யோகிபாபு கூட்டணி மீண்டும் கைகோர்த்துள்ளது.
சமுத்திரக்கனி உறுதுணை கதாபாத்திரத்தில் நடித்த ’தலைவி’, ‘எம்.ஜி.ஆர் மகன்’, ‘டான்’, ’ரைட்டர்’ பல திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. சமீபத்தில் தான் இவரது நடிப்பில் “வெள்ளை யானை” என்ற திரைப்படம் வெளியானது. இன்னும் பல படங்களில் இவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’ என்ற திரைப்படத்தில், யோகிபாபுவும், சமுத்திரக்கனியும் மீண்டும் கூட்டணி சேர உள்ளனர். இதில் இவருக்கு ஜோடியாக, கதாநாயகி ரித்விகாவும், மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ஜோ மல்லூரி, தேவ தர்ஷினி உள்ளிட்ட பிரபல நடிகர்களும் நடிக்கிறார்கள்.