இந்நிலையில் ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஜெய் பீம் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் சூர்யா கலந்து கொண்டார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார். அதில், ரசிகர்களுடைய அன்பை எப்படி திருப்பு கொடுப்பது என்று நான் தவித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், தோனி எப்போதுமே அதை தவற விட்டதில்லை. அழுது கொண்டிருந்த சிறுமியை ஆட்டத்தில் வெற்றி பெற்றதும் அதில் கையெழுத்திட்டு அந்த சிறுமிக்கு தோனி கொடுத்திருக்கிறார். உடனே அந்த சிறுமியை சிரிக்க வைத்திருக்கிறார். அந்த சிறுமியின் வாழ்க்கையில் அந்த தருணத்தை என்றும் மறக்க முடியாத வகையில் தோனி மாற்றியுள்ளார்.
அதேபோல் என் மனைவி ஜோதிகா ஒருமுறை குழந்தைகளுடன் தோனியை பார்க்க வேண்டும் என்று கேட்டபோது அவரும் எங்களுக்கான நேரத்தை கொடுத்தார். எப்போதெல்லாம் அவரால் பிறருக்கு நேரத்தை கொடுத்தார். முடியுமோ அதை கொடுப்பதில் அவர் தயங்கியதே கிடையாது. 24 படத்தில் அவருடன் செல்பி எடுக்க கேட்டேன். தோனி அனுமதி கொடுத்தார்.
அதேபோல் பிபிசியில் இருந்து அவர் ஆடும் பதிவுகள் வேண்டும் என்று கேட்டபோது அதற்கு சம்மதித்து வாங்கி கொடுத்தார். இப்படி தோனி ரசிகர்களின் ஆசைகளையும் சில கோரிக்கைகளையும் நிறைவேற்றி வருகிறார். அதோடு தோனியிடமிருந்து எனக்கு நிறைய அன்பு கிடைத்திருக்கிறது என்று சூர்யா தெரிவித்துள்ளார். அவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரவீந்தர் சந்திரசேகரன் வாழ்த்தும் திரைப்பட பூஜை….!