தேய்பிறை பாடல் வரிகள்
தேய்பிறையை பெத்தெடுத்தே
கண்போல காத்திருந்தேன்
கத்திமுனை சூழ்நிலையில்
காப்பாத்த வழியுமில்லை
காப்பாத்த வழியுமில்லை
என்னை விட்டு போறியா
என் உயிர்துளியே உறவினமே
கண்ணெதிரே கலங்குறியே
கதறித்தான் நிக்குறியே
கையிருந்தும் உதவவில்லை
கண்ணால பாத்திருந்தேன்
எந்த நாடு போறீகளோ
எப்படி போறீகளோ எப்படி போறீகளோ
அந்த நாடு எப்படியோ
அந்த மக்க எப்படியோ
வரவேற்று ஏற்பாரோ
முகஞ்சுளித்து வெறுப்போரா
முகஞ்சுளிச்சு வெறுப்போரா
முகஞ்சுளிச்சு வெறுப்போரா
எப்போ நாம சேருவமோ
எப்படித்தான் சேருவமோ
அல்லாடும் என் உசுரும்
அதுவரையும் தங்கிடுமோ
எப்போ நாம சேருவமோ
எப்படித்தான் சேருவமோ
அல்லாடும் என் உசுரும்
அதுவரையும் தங்கிடுமோ
தாயிருக்க பிள்ளையழ
போர்க்களமும் செதறடிக்க
கை பெசஞ்சு தாயும் நிக்க
பிள்ளை இப்ப ஏதிலியாம்
தேசமெங்கும் அலங்கோலம்
தாய்மனசு கலங்குதய்யா
பூமழைய பாத்த பூமி
குண்டு மழை பாக்குதய்யா
தேய்பிறையை பெத்தெடுத்தே
கண்போல காத்திருந்தேன்
கத்திமுனை சூழ்நிலையில்
காப்பாத்த வழியுமில்லை
காப்பாத்த வழியுமில்லை
என்னை விட்டு போறியா
என் உயிர்துளியே உறவினமே
கண்ணெதிரே கலங்குறியே
கதறித்தான் நிக்குறியே
கோலமெல்லாம்
நாளை மாறி போகுமய்யா
காலம் வரும்
நம்பிக்கையா போயி வாங்க
கோலமெல்லாம்
நாளை மாறி போகுமய்யா
காலம் வரும்
நம்பிக்கையா போயி வாங்க
மீண்டு வந்து வாழ்ந்திடலாம்
போய் வாங்க
தாய்நாடும் காத்திருக்கு
போய் வாங்க
ஒரு கதவு மூடுச்சின்னா
மறு கதவிருக்கு
எம்புள்ள வாழ இந்த
பூமியிலே இடமிருக்கு
தேய்பிறையை பெத்தெடுத்தே (3)
ஹோ ஹோ ஒ ஹோ ஹோ ஓ ஹோ (6)
Source link
www.isaiulagam.com
ETSAdmin