HomeSportsவிளையாட்டு செய்திகள்TN Government is taking measures to handle 3rd wave says health Secretary...

TN Government is taking measures to handle 3rd wave says health Secretary | தமிழகத்தில் 3வது அலையை தடுக்க நடவடிக்கை: சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன்


தமிழகத்தில் மூன்றாவது அலை வருமா என்பது குறித்து தெளிவாக தெரியாவிட்டாலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில், தமிழக அரசின் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசார விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடக்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 
நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன், கொரோனா மூன்றாவது அலை வரும் என்பது குறித்து தெளிவாக தெரியாவிட்டாலும், வந்தால், அதை கையாளும் வகையில், தொற்று பரவலை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். மேலும், கொரோன அபரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு மிகவும்  முக்கியம் எனவும் அவர் கூறினார்.  

ALSO READ | தமிழகத்தில் ஆகஸ்ட் 9 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு முழுவதும் ஒரு வார காலத்திற்கு தீவிரமாக கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்த சுகாதார செயலர், தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என்றார். அதோடு, அங்கு தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என கூறப்படும் கூறப்படும் நிலையில் 25% படுக்கைகள் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது என்றும் சுகாதார செயலர் ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

நேற்று தமிழ்நாட்டில் 1,947 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  25,57,611 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 215 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 27 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,050 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 20,934 ஆக உள்ளது.

ALSO READ | Elections: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடங்கின

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read