நடிகர் விஜய் வீட்டின் முன்பு திடீரென அவரது ரசிகர்கள் தர்ணா போராட்டம் நடத்துவதாக புகைப்படங்களுடன் கூடிய செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் இன்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள் திரையுலகினர் அரசியல்வாதிகள் உள்பட பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் விஜய்யின் பிறந்த நாள் குறித்த ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் வீட்டின் முன் திடீரென அவரது ரசிகர்கள் சிலர் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் விஜய் வீட்டில் இருந்து வெளியே வந்து தங்களை பார்க்க வேண்டும் என்றும் தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து அவரது ரசிகர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்ததும் காவல்துறையினர் விஜய் வீட்டிற்கு முன் தர்ணா போராட்டம் நடத்திய ரசிகர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.