நேற்று கமல்ஹாசன் அவர்கள் புற்று நோயால் பாதித்த ஒருவரை ஜூம் மூலம் உரையாடினார் என்பதும் அவரது உரையாடல் மிகப் பெரிய அளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் நம்பிக்கையை அளித்தது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் கமல்ஹாசனை அடுத்து இதே போன்ற ஒரு மனிதநேய செயலை மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் செய்துள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர் ஒருவர் விஜய் சேதுபதியை நேரில் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த நிலையில் அந்த சிறுவனை நேரில் சந்தித்து அவருக்கு நம்பிக்கை ஊட்டிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தன்னை நேரில் பார்க்க வேண்டும் என புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் விருப்பப்படுவதாக ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் கேள்விப்பட்ட விஜய் சேதுபதி அந்த சிறுவனை குடும்பத்தினரோடு தனது வீட்டிற்கு அழைத்து அந்த சிறுவனை கட்டி அணைத்து தனது பாணியில் முத்தம் கொடுத்து அந்த சிறுவனுக்கு நம்பிக்கை ஊட்டினார். அப்போது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.