![“என் பெற்றோர்கள் எனக்கு அதைச் சொல்லித் தரவில்லை” – பிசிசிஐ அழைப்பும் ரித்திமான் சாஹாவின் பதிலும்! | Wriddhiman Saha opens up about the journalist issue “என் பெற்றோர்கள் எனக்கு அதைச் சொல்லித் தரவில்லை” – பிசிசிஐ அழைப்பும் ரித்திமான் சாஹாவின் பதிலும்! | Wriddhiman Saha opens up about the journalist issue](https://karkey.in/wp-content/uploads/https://gumlet.assettype.com/vikatan/2022-02/23309ad6-e73c-4cea-8ec4-b28bfb3bb36e/295805.jpg?rect=0,0,1381,725&w=1200&auto=format,compress&ogImage=true)
[ad_1]
இதற்கு பதிலளிக்கும் விதமாக சாஹா, “எனக்கு இன்னும் பிசிசிஐ-யிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. என்னிடம் அந்தப் பத்திரிகையாளரின் பெயரை வெளியிட சொல்லிக் கேட்டால், எனக்கு யாருடைய தொழிலையும் கெடுக்கும் உள்நோக்கம் இல்லை என நான் அவர்களிடம் சொல்வேன். அதனால்தான் ட்விட்டரில் கூட பெயரை வெளியிடவில்லை. என் பெற்றோர்கள் எனக்கு அதைச் சொல்லித் தரவில்லை. மீடியாவில் இருக்கும் ஒருவர் ஒரு விளையாட்டு வீரரின் விருப்பத்தை அவமதிக்கும் செயலை வெளிக்காட்டுவதே என்னுடைய ட்விட்டின் முதன்மையான நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.
![ரித்திமான் சாஹா | Wriddhiman Saha](https://gumlet.assettype.com/vikatan%2F2022-02%2F3ba9d8d3-7e04-4e61-b9cd-51fe87762d6b%2FP1_wriddhiman_saha_2col.jpg?auto=format%2Ccompress)
மேலும், “இது சரியானதல்ல. இதை யார் செய்தாரோ அவர் நன்கு அறிவார். விளையாட்டு வீரர்கள் இனி இது போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள கூடாது என்பதற்காகவே நான் அந்த ட்விட்டை பகிர்ந்தேன். என்ன நடந்ததோ அது தவறானது, யாரும் அதனை திருப்பி செய்யக் கூடாது என்பதையே சொல்ல விரும்பினேன்” என்று தெரிவித்துள்ளார்.
[ad_2]
Source link
sports.vikatan.com
பிரபாகரன் சண்முகநாதன்