[ad_1]
இந்நிலையில், “நான் தடுப்பூசிக்கு ஒருபோதும் எதிரானவன் அல்லன். சிறுவயதில் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால், நம் உடலில் எதைச் செலுத்தப்போகிறார்களோ, அதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை எப்போதும் ஆதரிப்பவன் நான். மேலும் என் உடல் தொடர்பாக நான் எடுக்கும் உரிமைகள் எனக்கு பரிசுக்கோப்பைகளை விடவும் மிக முக்கியம். வரும் காலங்களில், `கட்டாய தடுப்பூசி’ விதிகள் மாறும்போது, இன்னும் பல ஆண்டுகள் என்னால் தொடர்ந்து விளையாட முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
“உலக அளவில், இந்த வைரஸ் தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அனைவரும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, எதிர்காலத்தில் எல்லாம் சரியாக இருந்தால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தயாராவேன்” என்றும் அவர் பேசியுள்ளார்.
[ad_2]
Source link
sports.vikatan.com
இ.நிவேதா