[ad_1]
தேவையானவை:
பசலைக் கீரை – 1 கட்டு
துவரம் பருப்பு – 200 கிராம்
சீரகம் – அரை தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு – கால் தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
பெருங்காயத்தூள் – கால் தேக்கரண்டி
பூண்டு பல் – 3
பச்சை மிளகாய் – 3
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – ஒன்று
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
குக்கரில் துவரம்பருப்பை இட்டு, போதுமான அளவு தண்ணீர் சேர்த்து 4 விசில் வரும் வரை வேக வைக்கவும். பின்னர், வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பிறகு சின்ன வெங்காயம் நறுக்கி போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர், தக்காளி சேர்த்து வதங்கியதும், பசலைக்கீரை சேர்த்து வதக்கவும். கீரை பாதி வெந்து சுருங்கியதும், சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும். பச்சை வாசனை போனதும் வேகவைத்த கீரை, உப்பு சேர்த்து நன்றாக கிளறி கொதிக்கவிடவும். இறுதியாக. மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து பொரித்து கீரையில் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான பசலைக்கீரை கூட்டு தயார்.
[ad_2]
Source link
www.dinakaran.com