![மதுரை : தேசிய அளவிலான போட்டிக்குச் செல்ல உதவி கேட்ட மாற்றுத்திறனாளி; உறுதியளித்த கலெக்டர்!|In Madurai physically challenged Sports women met District Collector for help மதுரை : தேசிய அளவிலான போட்டிக்குச் செல்ல உதவி கேட்ட மாற்றுத்திறனாளி; உறுதியளித்த கலெக்டர்!|In Madurai physically challenged Sports women met District Collector for help](https://karkey.in/wp-content/uploads/https://gumlet.vikatan.com/vikatan/2022-03/2ff1ad7a-6b59-4d26-ba82-c3ab2a420f81/IMG_20220328_WA0018.jpg?rect=0,26,438,230&w=1200&auto=format,compress&ogImage=true)
[ad_1]
மத்திய பிரதேசத்தில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க உதவி செய்ய வேண்டி கலெக்டரிடம் உதவி கேட்டு மனு அளித்திருக்கிறார். மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீராங்கனை பாத்திமா பீவி.
![பாத்திமா பீவி](https://gumlet.vikatan.com/vikatan%2F2022-03%2F87764cf5-c27d-4e90-8746-2e8b39c9b850%2FIMG_20220328_WA0019.jpg?auto=format%2Ccompress)
மதுரை திருப்பரங்குன்றத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளியான பாத்திமா பீவி, டேபிள் டென்னிஸில் மாநில, தேசிய அளவில் பல பதக்கங்களைப் பெற்றுள்ளார். கணவர் ஆதரவில்லாமல், பொருளாதரப் பின்னணியும் இல்லாமல் தன் குழந்தைகளுடன் கஷ்டத்தில் வாழ்ந்தபடி கடந்த 15 வருடங்களாக பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று டேபிள் டென்னிஸ், தட்டு எறிதல், ஈட்டி ஏறிதல் உள்ளிட்ட போட்டிகளில் பல்வேறு மாநிலங்களில் விளையாடி தங்கம், வெள்ளி பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
[ad_2]
Source link
sports.vikatan.com
செ.சல்மான் பாரிஸ்