Home சினிமா செய்திகள் மூனே முக்கால் கோடியில் 23 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்த கோடீஸ்வரன் திரைப்படம்… வெளிவராததற்கு காரணம் என்ன? | What is the reason why Kodeeswaran movie, which was made 23 years ago for about 3.5 crores, was not released?

மூனே முக்கால் கோடியில் 23 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்த கோடீஸ்வரன் திரைப்படம்… வெளிவராததற்கு காரணம் என்ன? | What is the reason why Kodeeswaran movie, which was made 23 years ago for about 3.5 crores, was not released?

0
மூனே முக்கால் கோடியில் 23 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்த கோடீஸ்வரன் திரைப்படம்… வெளிவராததற்கு காரணம் என்ன? | What is the reason why Kodeeswaran movie, which was made 23 years ago for about 3.5 crores, was not released?

 நடிகர்கள் தேர்வு

நடிகர்கள் தேர்வு

இந்தக் கதையில் யார் நடித்தால் சரியாக இருக்கும் என்று யோசனை செய்து கொண்டிருக்கும் போது நடிகர் விஜய் அல்லது அஜித் நடித்தால் தான் சரியாக இருப்பார்கள் என்று முடிவு செய்து, முதலில் விஜயே பார்த்து கதை சொல்லியிருந்தார் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது அதன் பின்பு எஸ் ஏ சந்திரசேகரை சந்தித்து கதை சொல்லும் பொது அவருக்கு பிடித்திருந்தது. ஆனால் அந்த கதை அன்றைய தினத்தில் இரண்டு கோடி பட்ஜெட்டில் இருந்தது, விஜய்யின் காதலுக்கு மரியாதை வெளியான நேரம் அது அப்பொழுது இரண்டு கோடி செலவு பண்ண விஜய் தரப்பில் இருந்து எந்த ஒரு தயாரிப்பாளரும் முன் வரவில்லை.

 பின்பு இந்த கதையே

பின்பு இந்த கதையே

கே டி குஞ்சுமேனிடம் சொன்னபோது அவர், விஜய் வேண்டாம் தன் மகனை வைத்து இயக்குமாறு சொல்லி இருந்திருக்கிறார் . அதன் பின்பு அவர் மகனை வைத்து கேமரா மேன் கே வி ஆனந்த் டெஸ்ட் ஷூட் செய்த போது சரியாக வரவில்லை.

 அஜித் சந்திப்பு

அஜித் சந்திப்பு

இந்த கதையை நடிகர் அஜித் ராசி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவரிடம் கதையே சொன்னபோது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது அவர் தரப்பில் உள்ள ஒரு தயாரிப்பாளருக்கு படம் பண்ணலாம் என்று சொன்னார் .

ஆனால் இயக்குனர் நந்தகுமார் நான் கே டி குஞ்சுமோன் கம்பெனியில் படம் பண்ணுவதாக ஏற்கனவே உறுதி அளித்து விட்டதாக அஜித்துடன் சொன்னார். இதைக் கேட்ட அஜித் தட்டிக் கொடுத்து அவரின் நேர்மையே பாராட்டி நீங்கள் வேறு ஒரு நடிகரை வைத்து அவர் கம்பெனிக்கு படம் பண்ணுங்க என்று சொல்லிவிட்டார்.

 நடிகைகள் தேர்வு

நடிகைகள் தேர்வு

நடிகை தேர்வுக்காக மும்பை சென்று ப்ரீத்தி ஜிந்தா வை சந்தித்தனர் ஆனால் சம்பள பிரச்சினை காரணமாக நடிக்க வைக்க முடியவில்லை பின்பு ரீமாசென் பார்த்த போது நடிகரை விட நடிகைக்கு வயது அதிகமாக தெரிந்த காரணத்தால் கைவிடப்பட்டது நடிகை நக்மா வின் தங்கையான ஜோதிகாவே அறிமுகம் செய்து வைக்க முடியுமா என்று இயக்குனர் நந்தகுமாரிடம் நக்மாகேட்டுக் கொண்டது காரணத்தினால் ஜோதிகாவை டெஸ்ட் ஷூட் செய்தபோது கதைக்கு சரியாக இருந்தது. ஆனால் கே டி குஞ்சுமொன் கம்பெனியில் வேலை செய்த ஒரு சில நபர்களுக்கு பிடிக்காத காரணத்தினால் கைவிடப்பட்டது பின்பு இறுதியாக சிம்ரன் தேர்வு செய்யப்பட்டு சூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது.

 ஒரு பாடலின் செலவு ஒரு கொடி

ஒரு பாடலின் செலவு ஒரு கொடி

இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெய்சங்கர், ரகுவரன் போன்ற பிரபலமான முப்பதுக்கு மேற்பட்ட நடிகர் நடிகைகள் நடித்து இருந்தார்கள். ஒரு பாடல் காட்சிக்காக ஒரு கோடி ரூபாய் செலவு செய்து மிக பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு கரிஷ்மா கபூர் நடனமாடி இருந்திருப்பார் அந்த காலகட்டத்திலேயே, முழு படம் எடுத்து முடிக்க ஏறத்தாழ மூனே முக்கால்(3 3/4) கோடி ரூபாய் செலவு ஆகி இருந்தது ஆனால் கே டி குஞ்சுமேன் கம்பெனியில் ஏற்பட்ட பிரச்சினைகளால் 23 ஆண்டுகளாகியும் இன்னும் இந்த திரைப்படம் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here