![யாருக்கு உதவினாலும் அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவேன் – ராகவா லாரன்ஸ் யாருக்கு உதவினாலும் அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவேன் – ராகவா லாரன்ஸ்](https://karkey.in/wp-content/uploads/https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/18/large/869390.jpg)
''இனி நான் யாருக்கு உதவி செய்தாலும் அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவேன்'' என நடிகர் ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சிபட தெரிவித்துள்ளார். உடன் அவர் அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலியில், ''நான் யாருக்கு உதவி செய்தாலும் என் காலில் விழக்கூடாது, அவர்கள் காலில் விழுந்து என் சேவையைச் செய்வேன். எனக்குள் ஒரு சிறு மாற்றத்தை கொண்டு வர நீண்ட நாட்களாக காத்திருந்தேன். இன்று நான் முதல் அடி எடுத்து வைக்கிறேன். உதவி கேட்பதற்காக ஏழைகள் பணக்காரர்களின் காலில் விழுவதை நான் எப்போதும் பார்த்திருக்கிறேன், உதவி பெற்ற பிறகு அவர்களும் அவ்வாறே செய்கிறார்கள். என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களால் நான் தனிப்பட்ட முறையில் அதைப் பார்க்க விரும்பவில்லை, அதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.