![“விமர்சனம் பண்றவங்களுக்கு `காது கேட்காது போடா’ என்பதுதான் என் பதில்!” – ரேகா நாயர் |actress rekha nair talks about her personal life “விமர்சனம் பண்றவங்களுக்கு `காது கேட்காது போடா’ என்பதுதான் என் பதில்!” – ரேகா நாயர் |actress rekha nair talks about her personal life](https://karkey.in/wp-content/uploads/https://gumlet.vikatan.com/vikatan/2022-09/348ea379-1237-4243-83e2-25cd7f653935/unnamed.webp?rect=0,0,1200,630&w=1200&auto=format,compress&ogImage=true)
[ad_1]
பாடிஷேமிங்… சோசியல் மீடியா, சினிமான்னு எல்லா இடங்களிலும் உருவக்கேலி நடக்குது. குறிப்பா பெண்களுக்கு இது அந்த காலத்துல இருந்து இந்த காலம் வரையில் நடந்துக்கிட்டேதான் இருக்கிறது. பொதுவா இப்படி ஒருத்தரோட உடல்மொழியை வைத்து கேலி செய்யுறதை நீங்க எப்படி பார்க்குறீங்க?
“ஹிந்தி தெரியாது போடா!!” அப்படின்னு சொல்ற மாதிரி “காது கேட்காது போடா!” அப்படினு தான் சொல்லணும். நம்மளோட நிறம், குணம்,அழகுன்னு எல்லாமே கடவுள் கொடுத்ததுன்னு சொல்றத விட இயற்கை கொடுத்துன்னு தான் சொல்லணும். இயற்கை நமக்கு என்ன கொடுத்ததோ அதை அப்படியே நம்ம ஏத்துக்கணும். ஒருத்தர் குண்டா இருந்தாலும்… ஒல்லியா இருந்தாலும், கறுப்பா இருந்தாலும் அதை அப்படியே ஏத்துக்க கூடிய மனநிலை நமக்கு இருக்கணும். அந்த மனநிலை இல்லைன்னா அதை பாடிஷேமிங்னு சொல்ல கூடாது “மைண்ட் ஷேமிங்”னு தான் சொல்லணும். ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து இறக்கும் வரை அதோட உடல் சுருக்கங்களை வைத்து மனிதர்கள் கவிதை எழுதிட்டுதான் இருப்பாங்க. அதெல்லாம் கண்டுக்காம போயிட்டே இருக்கணும்.
[ad_2]