“நாங்க வீட்ல எப்பவும் ஒருத்தரையொருத்தர் ஓட்டிட்டு கிண்டல் பண்ணிகிட்டு ஜாலியா இருப்போம். அப்படி வீட்ல எப்படி கேஷூவலா பேசுவோமோ அப்படியே ஷோவுலயும் பேசிட்டேன். நான் ஷோவுல அந்த ஏபிசிடி படிப்பாருன்னு சொன்னதெல்லாம் வராது, காட்ட மாட்டாங்கன்னு நினைச்சேன். ஆனா, அதுதான் வைரலாகும்னு நாங்க எதிர்பார்க்கலை. இவர்கூட நீ அந்த வார்த்தையை சொல்லியிருக்கக் கூடாதோன்னு சொன்னார். அந்த அளவுக்கு அந்த வார்த்தை வைரலாகிடுச்சு.
ஷோவில் என்னமோ நான்தான் வீட்டில் ஆதிக்கம் காட்டுன மாதிரி காட்டினாங்க. ஆனா, வீட்டில் நான்தான் பயந்து பயந்து இருப்பேன். ஏதாவது அவர்கிட்ட கேட்கணும்னாலும் பயந்துதான் கேட்பேன்” என்றவுடன், “அப்படியெல்லாம் இல்லைங்க…” என்ற சீனிராஜா தொடர்ந்து பேசினார்.
“ஒரு வருஷமா கிட்னி பிரச்னை. சின்ன வயசிலேயே மளிகைக் கடைக்கு வேலைக்கு வந்துட்டேன். டெலிவரிக்கு அலையுறதனால நேரத்துக்குச் சாப்பிட முடியாது, தண்ணீர் குடிக்க முடியாது, யூரின் போக முடியாது. அப்படி இருந்து, இருந்து கிட்னி சுருங்கி போயிடுச்சுன்னு சொல்லிட்டாங்க. ஒரு வருஷமா காப்பீட்டுத்திட்டம் பயன்படுத்தி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பண்ணிட்டு இருக்கேன். பாப்பா படிப்பு செலவு, போக்குவரத்து செலவுக்குத்தான் கொஞ்சம் சிரமமா இருக்கு.