Home சினிமா செய்திகள் 50 எபிசோடுகளுக்குள் நிறுத்தப்பட்ட சீரியல் – இயக்குநர் உருக்கமான பதிவு!

50 எபிசோடுகளுக்குள் நிறுத்தப்பட்ட சீரியல் – இயக்குநர் உருக்கமான பதிவு!

0
50 எபிசோடுகளுக்குள் நிறுத்தப்பட்ட சீரியல் – இயக்குநர் உருக்கமான பதிவு!

[ad_1]

விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பான தொடர் ‘வைதேகி காத்திருந்தாள்’. இந்தத் தொடர் ஆரம்பித்த வேகத்திலேயே முடிவடைந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தொடரில் நடிகர் பிரஜினும், சரண்யாவும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், பிரஜின் சமீபத்தில் படங்களில் நடிப்பதால் சீரியலுக்கு தேதி ஒதுக்க முடியவில்லை என்பதால் இந்தத் தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக ‘ராஜபார்வை’ தொடரில் கதாநாயகனாக நடித்த முன்னா என்பவர் கதாநாயகனாக என்ட்ரியானார்.

தற்போது, அதிகாரப்பூர்வமாக இந்தத் தொடர் முடிவடைந்துள்ளது. இது குறித்து, இந்தத் தொடரின் இயக்குனர் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், ‘வாழ்க்கைப் பயணத்துல சுவாரஸ்யமான விஷயமே பல திருப்பங்கள் தான். இன்னும் கூடுதலான பாஸிட்டிவ் எனர்ஜியோட அடுத்த எதிர்பாராத சுவாரஸ்யத்தைத் தேடிப் பயணிக்கிறேன். எனது பயணத்தில் எனக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்து வரும் தங்களுக்கும், என்னுடன் பயணித்த.. பயணிக்கும் அனைவருக்கும் என்றென்றும் நன்றிகள் பல!’ என பதிவிட்டிருக்கிறார். சமீப காலமாக தொடர்ந்து சீரியலிலிருந்து நடிகர், நடிகைகள் வெளியேறுவதும் மாற்றப்படுவதும் நடந்த நிலையில் இந்த பதிவும் சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



[ad_2]

Source link

cinema.vikatan.com

வெ.வித்யா காயத்ரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here