[ad_1]
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும், அதனால் பல மாநிலங்களில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் படப்பிடிப்பு இல்லாததால் நடிகர் நடிகைகள் தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகின்றனர் என்றும் ஓய்வு நேரத்தில் சமூக வலைதளங்களில் அவர்கள் ஆக்டிவ்வாக இருக்கிறார்கள் என்பதும் குறிப்பாக நடிகைகள் பலர் தங்களுடைய சிறுவயது புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தமிழ் தெலுங்கு மலையாள நடிகைகளில் ஒருவரான மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிறு வயது புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். குட்டிப் பாப்பாவாக தனது அம்மா மற்றும் பாட்டியுடன் மஞ்சிமா மோகன் இருக்கும் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்பு நடித்த ’அச்சம் என்பது மடமையடா’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள மஞ்சிமா மோகன் தற்போது விஜய்சேதுபதியுடன் ’துக்ளக் தர்பார்’ ஜீவாவுடன் ’களத்தில் இருப்போம்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
[ad_2]
Source link