[ad_1]
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனை ஒன்றில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தொடந்து சிகிச்சையும் பெற்று வருகிறார். அவருக்கு கீழ் மூச்சுக் குழாயில் தொற்று இருப்பதால் சிகிச்சை அவசியம் என்றும் லேசான காய்ச்சல் இருக்கிறது என்றும் சொல்லப்பட்டது. கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டு டோஸ்களைகளும் போட்டுக் கொண்டதால் பெரியளவில் அவருக்கு பாதிப்பு நேராது, விரைவில் குணமடைந்து விடுவார் என்று மருத்துவமனை தரப்பு தெரிவித்தது. கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விரச்சுவலாக தோன்றி மக்களிடம் பேசியிருந்தார் கமல். ‘இப்போது கமல் எப்படியிருக்கிறார்? எப்போது வீடு திரும்புவார்?’ என கமலுக்கு நெருங்கியவர்களை விசாரித்தோம்.
”கமல் சார் நலமுடன் இருக்கிறார். கடந்த நான்கு நாட்களாக அவருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் இல்லை. முற்றிலும் குணமாக சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். நன்றாக சாப்பிடுகிறார். தேவைப்பட்டால், சில பரிசோதனைகள் மட்டும் செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். அந்த பரிசோதனைகளை பொறுத்தே டிஸ்சார்ஜ் குறித்து முடிவு செய்வார்கள். பரிசோதனைக்கான தேவையில்லை என்று முடிவெடுக்கப்பட்டால் நாளையே கூட அவர் டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்பு இருக்கிறது. ” என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
இப்படியான சூழலில் தற்போது மருத்துவமனையிலிருந்து அறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அவரை டிசம்பர் மூன்றாம் தேதிவரை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியிருக்கிறார்கள். டிசம்பர் நான்காம் தேதியில் இருந்து அவர் தன் வேலைகளில் ஈடுபடலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
[ad_2]
Source link
cinema.vikatan.com
மை.பாரதிராஜா