![வேள்பாரி நாவல் படமாகிறதா; உறுதியாகும் ஷங்கர் – சூர்யா கூட்டணி? |Update |Is Shankar join hands with surya for velpaari வேள்பாரி நாவல் படமாகிறதா; உறுதியாகும் ஷங்கர் – சூர்யா கூட்டணி? |Update |Is Shankar join hands with surya for velpaari](https://karkey.in/wp-content/uploads/https://gumlet.vikatan.com/vikatan/2022-09/f033579f-e996-4b76-9c44-a81c716cb49b/42270_thumb.jpg?rect=0,0,264,139&w=1200&auto=format,compress&ogImage=true)
எழுத்தாளரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் எழுதிய `வேள்பாரி’ ஆனந்த விகடன் இதழில் தெடராக வெளிவந்தது. அப்போதே பரவலாகக் கவனம் பெற்றது. இதற்கிடையில் தற்போது வேள்பாரி நாவல் படமாகிறது என்றும் ஷங்கரின் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது இது குறித்து விசாரித்தோம்.
கார்த்தியின் ‘விருமன்’ பட விழா மதுரையில் நடந்த போது அந்த விழாவிற்கு சு.வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அப்போது மேடையில் பேசிய சூர்யா, “தமிழர்களின் முக்கியமான அடையாளமாக காவல் கோட்டம், வேள்பாரி ஆகிய நாவல்களைச் சொல்வேன். அதை எழுதிய சு.வெங்கடேசனோடு பயணிப்பது அழகான பயணமாகும். அடுத்து அமையும் மேடையில் இதுகுறித்து சொல்கிறேன்” என புன்னகை பொங்க, பேசினார் சூர்யா. அந்த விழாவில் இயக்குநர் ஷங்கரும் இருந்தார்.
![எழுத்தாளர் சு.வெங்கடேசன்](https://gumlet.vikatan.com/vikatan%2F2021-08%2F6f98ca05-1af6-4aa0-83ad-0cceade89c34%2Fsuve.jpg?auto=format%2Ccompress)
”சூர்யா தரமான கதைகளையும், படங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். கல்வி, விவசாயம் போன்ற நல்ல விஷயங்களை சிறப்பாக செய்து வருகிறார்” என ஷங்கரும் அதே மேடையில் பேசியிருந்தார். ஷங்கர்- சு.வெங்கடேசன் – சூர்யா கூட்டணி ‘வேள்பாரி’க்காக இணைவது குறித்து அப்போதே, க்ளூ கொடுத்திருந்தனர். அந்த புள்ளி இப்போது அழகான கோலமாகி இருக்கிறது.
சூர்யா இப்போது பாலாவின் இயக்கத்திலும், ‘சிறுத்தை’ சிவாவின் இயக்கத்திலும் நடித்து வருகிறார். அடுத்து வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ கைவசம் வைத்திருக்கிறார். அதைப் போல, ஷங்கர் இப்போது ராம்சரண், கமல் இருவரின் படங்களையும் இயக்கி வருகிறார். ஆக ஷங்கர் – சூர்யா இணையும் படம் எப்போது தொடங்கும் என இன்னும் திட்டமிடவில்லை.
இப்போது சிவாவின் இயக்கத்தில் நடித்து வருவது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நடக்கும் பீரியட் ஃபிலிம் என்றும், ‘வேள்பாரி’ சரித்திரக் கதை என்பதால், அதற்கான சூழல்கள், மற்றும் இதர விஷயங்களை விவாதித்து வருகின்றனர் என்றும், அதன்பின்பே அதிகார பூர்வமாக அறிவிக்க உள்ளதாக சொல்கிறார்கள். அனேகமாக ஷங்கர்- சூர்யா படம் குறித்த அறிவிப்பு பொங்கல் அன்று அறிவிக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகின்றன.